திருப்பூர், அக்.2- திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பரி சோதனையை 6 ஆயிரம் வரை அதிகப்படுத்தக் கோரி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மார்ச் 24 ஆம் தேதியன்று துவங்கிய கொரோனா பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31க்கு பிறகு பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங் கள், திரையரங்குகள் தவிர ஏனைய கட்டுப்பாடுகள் தளர்த் தப்பட்டுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவ லும் திருப்பூர் மாவட்டத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக நோய்த்தொற்று பரவல் தினசரி 300யை கடந்துள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
இதில், மாவட்ட நிர்வாகமோ எதிலும் தலையிடாமல் அமைதி காக்கும் நிலையே உள்ளதென குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் இரண்டு முறை மாநில முதல்வர், சுகதாரத்துறைச் செயலா ளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மேற்படி பிரச்சனைகள் குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்றை கட் டுப்படுத்த மாவட்டம் முழுவதும் தினசரி பரிசோதனையை 6 ஆயிரம் வரை அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். பரி சோதனை மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்.
குடிநீர், கழிப்பறை மற்றும் கொரோனா வார்டு களை முறையாக பராமரித்திட வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின் போது உரிய மருத்துவ வழி காட்டுதலும், மருந்து பொருட்களும் வழங்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் குறைந்தபட்ச மருத்துவ பரிசோதனைகளை பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள் ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனு வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.