திருப்பூர், பிப். 9 – திருப்பூர் மாநகரில் காங்கேயம் சாலை கே.பி.புதூர் தொலைபேசி நிலையம் அருகே பல நாட்களாக குடிநீர் பிரதான விநியோகக் குழா யில் கசிவு ஏற்பட்டு குடிநீர் விரய மாகி வருகிறது. இப்பிரச்சனை யில் மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்காத நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தோர் குடி நீர் கசிவு இருக்கும் இடத்தில் குளித்து, துணி துவைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகரில் மேட்டுப்பா ளையம் பவானி ஆற்றில் இருந்து இரண்டாவது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெற்று விநியோ கம் செய்யப்படுகிறது. இத்துடன் புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட் டுக் கழகத்தின் மூலம் காவிரி ஆற்று நீரைப் பெற்று மூன்றாவது குடி நீர்த் திட்டமும் செயல்படுத்தப்ப டுகிறது. மூன்று திட்டங்கள் இருந் தாலும் நகரின் தேவைக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்ப தில்லை. எனவே நான்காவது குடி நீர் திட்டத்திற்கான கட்டமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க ஏற்கெ னவே மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு வரும் பிர தான குடிநீர் விநியோகக் குழா யிலும், மாநகருக்குள் இருக்கும் பகிர்மான, விநியோகக் குழாய்க ளிலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிவதும், விரய மாகிச் செல்வதுதம் வாடிக்கை யாக உள்ளது. குறிப்பாக திருப்பூர் மாநகருக் குள் குடிநீர் வரக்கூடிய அவிநாசி சாலையில் ஏழெட்டு இடங்களில் குடிநீர் விரயமாகிறது. அதை அவ் வப்போது சரி செய்தாலும் நீடித்த நிரந்தத் தீர்வாக இருப்பதில்லை. மீண்டும் மீண்டும் உடைப்பு ஏற்ப டுவதும், குடிநீர் பல லட்சம் லிட்டர் விரயமாகி, கழிவுநீர் சாக்கடை யில் கலப்பதும் தெடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலை யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் பங்களா பேருந்து நிறுத் தம் பகுதியில் சந்திரசேகர் என்ற தன்னார்வலர் ஒருவர் குடிநீர் குழாய் உடைப்பு இருக்கும் இடத் தில் இறங்கி சோப்பு போட்டுக் குளித்து நூதனப் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அந்த இடத்தில் அடைப்பை சரி செய்யும் வேலையில் மாநக ராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. இந்நிலையில், திருப்பூர் தெற்கு பகுதியில் காங்கேயம் சாலையில் கே.பி.புதூர் தொலை பேசி நிலையம் அருகில் பல நாட்க ளாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாகிச் சென்று கொண்டிருந்தது. இதை சரி செய்வதற்கு மாநகராட்சி நிர் வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி, அப்பகுதி யைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜியா வுல் ஹக் என்பவர் மற்றும் சிலர் சேர்ந்து ஞாயிறன்று அங்கு நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்கள் அந்த இடத்தில் விரய மான குடிநீரில் குளித்ததுடன், துணிகளையும் சோப்புப் போட் டுத் துவைத்து போராட்டம் நடத்தி னர். கோடை காலம் நெருங்கும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்று தெரிந்தும் இது போன்ற குடிநீர் உடைப்பு களை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் அலட்சியம் காட்டுவ தாக பொது மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் இதுபோன்ற உடைப் புகளால் ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான லிட்டர் குடிநீர் வீணா கிறது. இதனால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய குடிநீர் இழப்பு ஏற்படுவதுடன், சாலைகளும் அரிக்கப்பட்டு பாதிக்கப்படுகின் றன. போதிய குடிநீர் கிடைக்கா விட்டாலும், குடிநீருக்கான வரி யையும் முழுமையாகச் செலுத்த வேண்டிய நிலையும் மக்களுக்கு உள்ளது. எனவே இது போன்ற குடி நீர் உடைப்புகளில் அலட்சியம் காட்டாமல் மாநகராட்சி நிர்வாகம் இதற்கென தனி நிர்வாக ஏற் பாட்டை உருவாக்கி எங்கு உடைப்பு ஏற்பட்டாலும் உடனடி யாக அதைச் சரி செய்ய வேண் டும் என பொது மக்கள் வற்புறுத்து கின்றனர்.