tamilnadu

img

காவல் துறையைக் கண்டித்து காங்கேயம் வியாபாரிகள் கடையடைப்பு

திருப்பூர், நவ. 16 - காங்கேயத்தில் மளிகைக்கடை வியாபாரியை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையைக் கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இந்த கடையடைப்புப் போரட் டத்தால் காங்கயம் நகரமே செறிச்சோடி காணப்பட்டது. காங்கயத்தை அடுத்துள்ள அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). இவர் காங்கயம், பழைய கோட்டை சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவில் தனது கடையில் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகளை தனது செல்போன் மூலம் பார்த்தபோது, தனது கடையின் மேற்கூரையைப் பிரித்து மர்ம நபர் ஒருவர் கடைக்குள் இறங்குவது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக கடைக்கு விரைந்து சென்று பார்த்தபோது உள்ளே திருடன் பொருட்களைத் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்று கடைக்குள்ளேயே விழுந்து காயமடைந்து விட்டார். கடை உரிமையாளர் சுரேஷ் மற்றும் சிலருடன் கடைக்குள் சிக்கியிருந்த திருட னைப் பிடித்து கடுமையாகத்  தாக்கிவிட்டார்.  இதைத் தொடர்ந்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவலர்கள் கடைக்குள் புகுந்து திருட முயன்ற சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை அழைத்துச் சென்றனர். படு காயம் அடைந்த நிலையில் அவரை கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.  அத்துடன் தனது கடையில் புகுந்த செல்வராஜை தாக்கியது தொடர்பாக மளிகைக் கடை உரிமையாளர் சுரே ஷையும் காங்கேயம் காவல் துறையினர் கைது செய்தனர். இது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இதையடுத்து வெள்ளியன்று காங்கயம் அனைத்து வணிகர் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். தனது கடைக்குள் புகுந்த திருடனைத் தாக்கியதாக மளி கைக் கடை வியாபாரி சுரேஷை காவல் துறையினர் கைது  செய்து சிறையில் அடைத்திருப்பதற்கு கண்டனம் தெரி வித்து ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்துவது என்று வியாபாரிகள் தீர்மானித்தனர். அதன்படி சனிக்கிழமை காங்கேயம் நகரில் கடைய டைப்பு நடைபெற்றது. அதிகாலை முதல் காங்கயம் நகரின்  பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காங்கே யம் பேருந்து நிலையம், மார்க்கெட், திருப்பூர் சாலை,  முக்கிய சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை,  கரூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே  சில கடைகள் மட்டும் திறந்திருந்தன. இதனால்  காங்கயம் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.