tamilnadu

img

அணைப்பாளையம் குளம், வழங்கு வாய்க்காலை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தொடக்கம்

திருப்பூர், செப். 4 – ஊத்துக்குளி வட்டம் அணைப் பாளையம் குளம், வழங்கு வாய்க் கால் தூர்வாரும் பணி மற்றும் கூடு துறை அணைக்கட்டு பழுது பார்த்து மேம்படுத்தும் பணி புதன் கிழமையன்று துவக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் நல்லாறு  இணையும் பகுதியில் அணைப்பா ளையம் கூடுதுறை அணைக்கட்டு உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்துவரும் நீர் இங்கிருந்து 3.2 கிலோமீட்டர் நீளமுள்ள வழங்கு  வாய்க்கால் மூலம் 76 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளை யம் குளத்தில் நிரம்பும் வகையில் முன்னோர்களால் வடிவமைக் கப்பட்டு உள்ளது. இதில் கூடு துறை அணைகட்டு சில ஆண்டுக ளுக்கு முன்பு உடைக்கப்பட்டது. மேலும் வழங்கு வாய்க்கால் மற்றும் அணைப்பாளையம் குளத்தில் வளர்ந்திருந்த சீமைக் கருவேலை அகற்றி தூர் வாரப் படாமல் இருந்தது. இதனால் இப் பகுதி விவசாயிகள் பாதிக்கப் பட்டனர். இந்த குளத்தில் நீர் நிரப்பப்பட்டால் 126 ஏக்கர் விவ சாய நிலம் பாசன வசதி பெறும். நொய்யல் ஆற்றில் மழை வெள்ள காலங்களில் வரும் நீரைத் தடுத்து இக்குளத்தில் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அத்துடன் பழுதடைந்த அணையை சீரமைக்க வேண் டும் என்றும் மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித்துறை அதிகாரிக ளுக்கும் கோரிக்கை மனு அளித் தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் குடிமராமத்துத் திட்டத்தில் அனுமதி பெற்று, தன் னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இப்பணியை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி செவ்வாயன்று காலை 10 மணியளவில் தூர்வா ரும் பணி துவக்கப்பட்டது. திருப் பூர் உமாசங்கர் சாந்தி அறக்கட் டளை சார்பில் ச.பெரியபாளை யம் கெஸ் ஆடை ஏற்றுமதி நிறு வன உரிமையாளர்  உமாசங்கர், திருப்பூர் கேட்ஸ்வேர் ஆடை ஏற் றுமதி நிறுவனத்தின்  உரிமையா ளர்கள் ஜெயக்குமார், திருநாவுக் கரசு ஆகியோர் இணைந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் இப்ப ணியை மேற்கொள்ள தீர்மானிக் கப்பட்டு, நிர்வாக அனுமதியும் பெறப்பட்டது. புதனன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் காங்கேயம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன், கேட்ஸ்வேர் உரிமையாளர் ஜெயக்குமார், கெஸ் நிறுவனம்  சார்பில் இப்பணி மேற்பார்வை யாளர் சந்திரசேகர், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாள ரும், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஆர்.குமார், அணைப்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஏ.எஸ்.பழனிசாமி, அணைப் பாளையம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி கள் டி.கருப்புசாமி, சென்னியப் பன், ஈஸ்வரன், வழக்கறிஞர்  டி.சுப்பிரமணி, வேலம்பாளையம் வி.கே.பழனிசாமி மற்றும் திர ளான விவசாயிகள் கலந்து கொண் டனர். இந்த பணியை 15 நாட்க ளில் நிறைவேற்ற திட்டமிட்டுள் ளனர்.