அவிநாசி, டிச. 23- அவிநாசி அருகே கருவலூரில் ஒரே வார்டில் எதிரும், புதிருமாக போட்டியி டும் பாஜகவை சேர்ந்த இரண்டு வேட்பா ளர்களுக்கும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் வாக்கு கேட்டு உள்ளூர் மக்களின் கேலிச் சிரிப்புக்கு ஆளானார். கருவலூரில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜகவைச் சேர்ந்த பூங்கோதை போட்டியிடுகிறார். அத்துடன் அப்பகுதியில் உள்ளாட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் பாஜகவி னர் போட்டியிடுகின்றனர். கருவலூர் மாரியம்மன் கோயில் அருகே பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பேசினார். ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பூங்கோ தைக்கு வாக்கு கேட்ட நிலையில், உள் ளூர் நிர்வாகிகள், அவரிடம் பாஜக சார் பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் பெயர் பட்டியலையும் கொடுத்தனர். அதில் கருவலூர் ஊராட்சி மன்ற 3ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் பாஜ கவைச் சேர்ந்த கபில்தேவ், ராஜேஷ் ஆகிய இருவரும் சுயேட்சை சின்னங்க ளில் போட்டியிடுகின்றனர். ஒரே வார்டில் பாஜகவை சேர்ந்த இருவர் போட்டியி டும் நிலையில் உள்ளூர் பாஜக நிர்வாகி கள் இருவர் பெயரையும் அவர்களுக் கான சின்னத்தையும் எழுதி வானதி சீனி வாசனிடம் கொடுத்தனர். அவரும் இரு வர் பெயரையும், இருவரது சின்னத்தை யும் சொல்லி மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஒரே வார்டில் போட்டியிடும் பாஜக வின் இரு வேட்பாளர்களுக்கும் வாக்களி யுங்கள் என பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளராக இருக்கும் வானதி சீனிவா சன் ஆதரவு கேட்டதை கவனித்த அங்கி ருந்த மக்கள் தலையில் அடித்துக் கொண்டு கேலி செய்து சிரித்துக் கொண் டனர்.