tamilnadu

img

திருப்பூரில் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையிட முயன்ற பாஜக நிர்வாகி கைது!

திருப்பூர், ஜூலை 29- அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை கொள்ளையிட முயற்சி செய்த நிர்வாகி முருகானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீநகர் மெயின் வீதி, துரை காம்ப்ளக்சில் உள்ள ஹிட்டாச்சி மணி ஸ்பாட் ஏடிஎம் சென்டரில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை கடந்த ஜூலை 20ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹாலோ பிளாக் கல்லை வைத்து உடைத்து சேதப்படுத்தி, பணத்தை திருட முயற்சி செய்தார். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரை காவலர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், பல்வேறு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பூர் அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பாஜக திருப்பூர் மாவட்ட பிரச்சார அணி செயலாளர் முருகானந்தம் (54) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நேற்று (ஜூலை28) முருகானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.