திருப்பூர், நவ. 1 - திருப்பூர் மாநகராட்சி செல்லம்மாள் காலனி தொடக்கப் பள்ளியில் வெள்ளியன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வே.நாகராஜ் கணேஷ்குமார் மொழிவாரி மாநிலங்கள் உருவானது குறித்தும், தமிழ் மொழியின் சிறப்புகள், தொன்மையை பறை சாற்றும் கீழடி அகழாய்வு குறித்தும் மாணவர்க ளுக்கு எடுத்துக் கூறினார். இதையடுத்து சிறப்பான தமிழ்ப் பெயர் சூட்டப் பட்டிருக்கும் மாணாக்கர் நால்வருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள், மாணாக்கர் கள் பங்கேற்றனர்.