திருநெல்வேலி, ஆக.16- நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் சனியன்று நடை பெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ஆட்சி யர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை யின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணி வகுப்பை தலைமையேற்று நடத்தியது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி. இவரின் தந்தை நாராயணசுவாமி (வயது 83) வெள்ளியன்று இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அவர் திண்டுக்கல் மாவட் டம் வடமதுரை புறப்பட இருந்தார். ஆனால் சுதந்திர தின நிகழ்ச்சியில் அணி வகுப்பு நடத்துவதற்கு திடீரென்று ஒரு வரை மாற்றியமைக்க முடியாது என்ற சூழ்நிலையில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை முடித்து விட்டுத்தான் உடனடியாக தந்தை உயிரிழந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப் பட்டு சென்றார். எந்த வகையிலும் குறை வின்றி அணிவகுப்பு நிகழ்த்திய பிறகு தான் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அனை வரும் கம்பீரமான பெண் காவல் அதி காரியை ஆறுதல் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.