திருநெல்வேலி, செப்.1- தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றா லம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவி களிலும் சீராக தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் 3 நாள் தொடர் விடுமுறையால் (சனி, ஞாயிறு, விநாயகர் சதுர்த்தி) குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.