திருச்சிராப்பள்ளி, நவ.4- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். மாவட்ட வரு வாய் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் குமார் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: பொன்மலைப்பட்டியில் ராக்கி எமல்சன், விஜயலெட்சுமி மகள் ஏஞ்சலின் லாரா பத்தாம் வகுப்பில் 440 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர். இவர் இந்த கல்வி யாண்டில் புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனை த்து மாணவர்கள் முன்பு சோம் பேறி, தத்தி, தூங்குமூஞ்சி என்றும் இந்த மாணவியின் தோற்றம் குறித்தும் கேலி பேசி உள்ளனர். அவமானப்படுத்தும் நடைமுறை
இதனால் பெரிதும் மன உளைச்ச லுக்கு உள்ளான மாணவி பெற் றோர்களிடம் சொல்ல முடியாமல் பரிதவித்துள்ளார். இந்நிலையில் காலாண்டு தேர்வில் நான்கு பாடங்களில் தேர்ச்சி பெற முடிய வில்லை. இதனால் ஆசிரியர்க ளால் மேலும் அவமானப்படுத்தப் பட்டுள்ளார். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் பெற்றோர்களை வரச் சொல்லி மாணவர்கள் முன்னால் பெற்றோர்களை அவ மானப்படுத்தும் நடைமுறை இந்ந பள்ளியில் உள்ளது. கடந்த 12.10.19ம் தேதி அன்று மாணவியின் தந்தை பள்ளி நிர்வா கத்தால் அழைக்கப்பட்டார். காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவி பெரிதும் பயந்து மன வேதனையில் இருந்துள்ளார். பள்ளிக்கு வந்து தனது தந்தையை கீழ் தளத்தில் இருக்க வைத்து விட்டு இரண்டாவது தளத்திற்கு சென்று ஆசிரியர்களை சந்தித்தற்கு அங்கு கூடியிருந்த ஆசிரியர்கள் உனது அப்பாவை அழைத்து வரா மல் இங்கு உனக்கு என்ன வேலை என்று மேலும் பயமுறுத்தும் வகையில் பேசி உள்ளனர். மருத்துவமனைக்கு வராத பள்ளி நிர்வாகம்
அனைவர் முன்பு தனது அப்பா அவமானப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து விட்டார். இதை நேரில் பார்த்து பரிதவித்த தந்தை இரண்டு கால்களும் நொறுங்கி இருந்த மகளை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். கடந்த 2-ஆம் தேதி வரை பல லட்சம் செலவு செய்தும் எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார். இதனால் அந்த மாணவியின் குடும்பம் பெரும் துயரத்தில் உள்ளது. இதுநாள் வரையிலும் பள்ளி நிர்வாகத்தில் இருந்து மருத்துவத்திற்கு எவ்விதமான உதவியும் செய்யவில்லை. நேரில் வந்தும் பார்க்கவில்லை. எனவே மாணவியின் உடல் நிலை மற்றும் அந்த குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண் டும் மாணவியின் மருத்துவச் செல விற்காக ரூ 20 லட்சம் பள்ளி நிர்வா கத்திடம் இழப்பீடு தொகையாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மஞ்சு. ரேச்சல், சிந்தியா ஆசிரியர்கள் மீது தற்கொலைக்கு தூண்டிய சட்டப்பிரிவின் அடிப் படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தண்டனை பெற்று த்தருமாறு கேட்டுக் கொள்கி றோம். என அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொன்மலை பகு திக்குழு செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, பகுதிசெயலாளர்கள் புவனேஸ் வரி, சந்திரா, நஜீமா ஆகியோர் உடனிருந்தனர்.