tamilnadu

img

திருச்சி: ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்துத் திருச்சி விமான நிலையத்தில் நடந்த சோதனையில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ 203 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த சசிகலா, தனலட்சுமி ஆகியோரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் 


;