ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிப்பதை தவிர்க்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஆக.21- தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி பயிற்றுநர்கள் சங்கத் தின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சியில் புத னன்று நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன் மகாலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகள், அதனை எந்த வகையில் எதிர்கொள்வது, அதனை தீர்ப்பதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து கலந்தா லோசிக்கப்பட்டது. இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஜிஎஸ்டி பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சங்க தலைவர் முஸ்ஹர் அலி செய்தியாளர்களி டம் கூறுகையில், படிவம் ஒன்பது, வருடத்திற்கு ஒருமுறை தாக்கல் செய்யப்படும். ஆனால் தற்போது மாதம் ஒருமுறை தாக்கல் செய்ய சொல்கிறார்கள். அவ்வாறு மத்திய அரசின் உத்தரவிற்கு பிறகு மாதம் மாதம் தாக்கல் செய்தாலும், அதனை ஒருங்கிணைத்து மீண்டும் ஒரே பைல்லாக தாக்கல் செய்ய சொல்வது எந்த வகையில் சரியாகும்? வரக்கூடிய காலக்கட்டங்களில் வியாபாரிகளின் தேவை கள் குறித்து கேட்டறிந்து அதனை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பி வைப்போம். இது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் வரக்கூடிய காலங்களில் புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் போது என்னென்ன தேவை என்பதை எங்கள் மூலமாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைவதோடு, குளறுபடிகள் குறைவாக இருக்கும். குளறுபடி கள் எந்த அளவிற்கு குறைகிறதோ அந்த அளவிற்கு அரசுக்கு வருவாய் அதிகமாக இருக்கும். ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாம தம் ஆனால், அபராதம் விதிப்பதை தவிர்த்து, ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென நாங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலை கேட்டுக் கொள்கிறோம் என்றார். முன்னதாக லியோ வரவேற்றார். முடிவில் பூமிநாதன் நன்றி கூறினார்.
தூர்வாரப்படாத நீர்நிலைகளில் காவிரி நீர் எப்படி வரும்?
நாகப்பட்டினம், ஆக.21- மேட்டூர் அணை மற்றும் கல்லணை திறக்கப்பட்டும், காவிரி யின் கடைமடைப் பகுதியான டெல்டா மாவட்டமாகிய நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் பகுதிகளுக்கு இன்னும் ஆறுகளிலோ, வாய்க்கால்களிலோ மண்ணை நனைப்பதற்குக் கூடக் காவிரி நீர் வரவில்லை. இதற்குத் தமிழக அரசே முழுப் பொறுப்பு. வேதாரண்யம் பகுதியில் ஒருகாலத்தில் செழிப்பாக ஓடிக் கொண்டிருந்த முல்லையாறு, இப்போது வறண்டு கிடக்கிறது. 2018, நவம்பர் 15 அன்று அடித்த கஜா புயலில், இந்த முல்லையாற்றின் மீது விழுந்து கிடக்கும் மரங்கள் இன்னும் அகற்றப்படவும் இல்லை; தூர்வாரப்படவும் இல்லை. இதே நிலைதான் வேதாரண்யம் பகுதி முழுவதும் உள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டும், காவிரி நீரை இப்பகுதியில் நாங்கள் கண்ணால் காணவே முடியாது என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.