அறந்தாங்கி, ஆக.9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மையத்தில் உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு புதிய பாட புத்தக பயிற்சி பாடவாரியாக முதற்கட்டமாக தமிழ் பாடம் தொடங்கியது. பயிற்சியினை அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் தொடங்கிவைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் முன்னிலை வகித்தார். இப்பயிற்சி ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கு புதிய பாடப்புத்தகம் தொடர்பான மாற்றங்களை பாடவாரியாக ஆசிரியர்களுக்கு எடுத்துக்கூறி விளக்கப்பட்டது. பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர் ஈஸ்வரன், சசிகுமார், செல்வராஜ், சரவணன், மகேஸ்வரி, சியாமளா, சாந்தி, கோமதி மற்றும் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.