பணி நீட்டிப்பு ஆணையை உடனே வழங்குக! கூட்டுறவு ஊழியர் சங்கம் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜூலை 20- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சௌந்திரராஜன் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை ஹபிபுல்லா வாசித்தார். வரவு- செலவு அறிக்கையை மாநில பொரு ளாளர் சலீம் சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், அடிப்படை விதி 127-ன் கீழ் பணி நீட்டிப்பு ஆணையினை பதிவாளர்கள் வழங்க வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு ஏற்கனவே பணி யில் உள்ள கள அலுவலர்களை கூடுதலாக கவனிக்க சொன்னதை மாற்றி புதிய பணியிடங்களை அனுமதிக்க வேண்டும். கூட்டுறவு தேர்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக இளங்கோவன் வரவேற்றார். மாரிக்கண்ணன் நன்றி கூறினார்.
ராகிங் கொடுமை மாணவர் தற்கொலை முயற்சி
கரூர், ஜூலை 20- கரூர் அரசு கலைக் கல்லூரி பி.ஏ.தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் விக்னேஷ் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிவசக்தி, நந்தகுமார். இந்நிலையில் சிவசக்தி, நந்தகுமார் ஆகியோர் விக்னேசை, பெண் பெயரிட்டு அழைத்து ராகிங் செய்தனராம். இதில் மனமுடைந்த விக்னேஷ், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரில் தாந்தோணி காவல்துறையினர் வழக்கு பதிந்து சிவசக்தி, நந்தகுமாரை கைது செய்தனர்.
வீடு புகுந்து செயின் பறிப்பு
குடவாசல், ஜூலை 20- திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எண்கண் தெற்கு தெருவில் வசிப்பவர் சகுந்தலா. இவரது கணவர் கனகசபாபதி. இவர்களது வீட்டிற்கு, உறவினர்கள் விளமல் கே.கே.நகரில் வசிக்கும் உமாராணி, அவரின் கணவர் சேகரன் ஆகியோர் வந்தனர். இவர்கள் வெள்ளிக் கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர், வீட்டின் முன்புறக் கதவைத் திறந்து உள்ளே புகுந்து உமாராணி அணிந்திருந்த 8 பவுன் செயினை திருடி விட்டு, சகுந்தலாவின் செயினை திருடும் போது சகுந்தலா திடுக்கிட்டு எழுந்து சத்தமிட்டார். இதில் சகுந்தலாவின் செயின் அறுந்து அரை பவுன் மட்டும் திரு டன் கைக்கு வந்து செயினை பிடுங்கிக் கொண்டு திருடன் தப்பினான். இருவரின் செயினும் சுமார் ஒன்பதரை பவுன் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் குடவாசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.