சீர்காழி, ஜூன் 12- நாகப்பட்டினம் மாவட் டம் சீர்காழி அருகே மகேந் திரப்பள்ளி ஊராட்சிக்குச் சொந்தமான முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மகேந்திரப்பள்ளி ஊராட் சிக்குச் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு டிராக்டருடன் கூடிய டேங்கர் வழங்கப்பட்டது. மகேந்திரப் பள்ளி ஊராட்சிக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்காகவும், மேலும் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டியுள்ள கிரா மங்களுக்கு குடியிருப்புகள் தோறும் சென்று குடிநீர் வழங்கு வதற்காகவும் வழங்கப்பட்ட டிராக்டருடன் கூடிய டேங்கர் சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் டிராக்டர் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியானது. தற்போது கடற்கரையோர கிராமங்களில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் குடிநீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். புதுப்பட்டினம் பழையாறு, கூழையாறு, கொட்டாய்மேடு ஆகிய கடலோர கிராமங்க ளுக்கு தனியார் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மகேந்திரப் பள்ளி ஊராட்சிக்கு குடிநீருக்காக வழங்கப்பட்ட டேங்கர் பல மாதங்களாக கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகம் எதிரே எந்த பயனுமின்றி துருப்பிடித்து கிடக்கிறது. எனவே மாயமான டிராக்டரை மீட்டு எடுத்து வந்து டேங்கரை பயன்படுத்தி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகேந்திரப்பள்ளி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.