tamilnadu

img

நாகப்பட்டினத்தில் த.மு.எ.க.ச. மாநிலக்குழு கூட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இருநாள் மாநிலக்குழுக் கூட்டம், நாகப்பட்டினம், யாழிசை அரங்கத்தில் சனிக்கிழமை துவங்கியது. கூட்டத்திற்கு மாநில கெளரவத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார். மாநிலத் துணைச் செயலாளர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, மாநில நிர்வாகிகள் எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள், களப்பிரன், கருணா, நாடகவியலாளர் பிரளயன் மற்றும் கவிஞர் நவகவி,  கி.அன்பரசன், இயக்குநர் ஏகாதசி, கரிசல் கிருஷ்ணசாமி, மயிலைபாலு, வெண்புறா, கி.அன்பரசன், நா.வே.அருள், மு.ஆனந்தன், தேனி சீருடையான், ஜனநேசன் உள்ளிட்ட படைப்பாளர்கள், கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். மாலை 6.00 மணிக்கு “என்ன செய்ய வருகிறது தேசியக் கல்விக் கொள்கை-2019?” எனும் பொருளில் பொதுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கெளரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் ப.பாலசுந்தரம் வரவேற்றார். முன்னாள் துணைவேந்தர் லெ.ஜவகர் நேசன், கல்வியுரிமைச் செயற்பாட்டாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் கருத்துரையற்றினர். நாகை மாவட்டத் தலைவர் ந.காவியன் நன்றி கூறினர்.