tamilnadu

img

ஆட்டோ, முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

திருவாரூர், மே 14- ஊரடங்கால் ஆட்டோ தொழிலா ளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலா ளர்கள் ஒட்டுமொத்தமாக வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டுத் தவித்து வரு கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் மற்றும் எல்ஐசி ஊழியர் சங்கம் இணைந்து திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி யில் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 100 பேருக்கு பத்து கிலோ அரிசி, ரூ. 300 மதிப்பிலான பருப்பு உள்ளிட்ட மளி கைப் பொருட்கள், ரூ. 150 மதிப்பிலான காய்கறிகளை வழங்கினர்.  நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் எஸ்.சரண்யாதேவி, அனைவருக்கும் கபசுர குடிநீர் மருந்தினை வழங்கி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை கடைபிடிக்க வேண்டு மென விளக்கி கூறினார். ஹோமியோ பதி மருத்துவர் வி.ஈஸ்வரமூர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தினை அனைவருக்கும் வழங்கினார்.  தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாநில தலைவர் எம். சௌந்தரராஜன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் டி.ஜெய ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனிவேலு, எல்ஐசி ஊழியர் சங்க முன்னணித் தலைவர் தெட்சிணாமூர்த்தி, கோட்டச் சங்க இணைச் செயலாளர் எஸ்.செந்தில் குமார், கிளைச் சங்கச் செயலாளர் கமலவடிவேலு, தலைவர் நிதிஷ் சண்முகசுந்தர், கோபாலகிருஷ்ணன், பள்ளியின் தாளாளர் முரளிதரன், முடிதிருத்தும் தொழிலாளர் சங்க தலை வர் மதி, வாசுகி, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.