தஞ்சாவூர், ஜூலை 24- குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 மாத கா லத்திற்கு ரேசன் பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் வழங்கும் பொருட்களை எடை குறைவின்றி வழங்க வேண்டும். ரேசன் கடை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது மாநகரத் தலைவர் ஹரிபிரசாத், மாநகரச் செயலாளர் கோஸ்கனி, வாலிபர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை. நாராயணன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் பி.அருண், நகரச் செயலாளர் எஸ்.பாபு, பொ ருளாளர் டேவிட்ராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட வழங்கல் அலு வலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.