பொன்னமராவதி, ஜூன் 20- அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்க புதுக் கோட்டை மாவட்ட(சிஐடியு) கிளை மற்றும் தகவல் பலகை திறப்பு விழா பொன்னமராவதியில் நடைபெற்றது. சேது ராமன் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஸ்ரீபட்டமராத்தான் டாடா ஏசி ஸ்டாண்டில் நடைபெற்ற விழாவிற்கு சங்க கிளை தலைவர் வீ.குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எம்.ஜியாவுதீன் தகவல் பலகையை திறந்து வைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கே.சிவக்குமார் சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் நா.பக்ருதீன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தீன், சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ். கண்ணன், கிளை பொறுப்பாளர்களான துணைத்தலைவர் கனகு, செயலாளர் சி.ஆறுமுகம், துணை செயலாளர் பி.எல்.கண்ணன், கிளை பொருளாளர் வி.விஷ்ணுகுமார், கிளை உறுப்பினர்கள் எஸ்.சின்னையா, ஆர்.மணி, ஆர். சின்னையா, எம்.உடையப்பன், ஜி.கார்த்திகேயன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.