tamilnadu

முசிறி மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி மனுக் கொடுக்கும் போராட்டம்
 

முசிறி, ஜூன் 29- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக் கொடுக்கும் போராட்டம் திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்றது. விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய செயலாளர் காஜாமொய்தீன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, ராஜா, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கோரிக்கை குறித்து  சிறப்புரையாற்றினர். போராட்டத்தில், குடிநீர், வறட்சி மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்றி முழுமையாக செயல்படுத்த வேண்டும். குடிநீர் பற்றாக்கு  றையை போக்க லாரிகளில் குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் கோரிக்கை மனுவை ஒன்றிய ஆணையரிடம் வழங்கினர்.  இதே போல் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்க ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் காமராஜ், சந்திரமோகன், செந்தில்நேரு உள்ளிட்ட பலர் பேசினர். மேலும் தா.பேட்டை ஒன்றியம் வாளவந்தி ஊராட்சியை சேர்ந்த தொட்டியப்பட்டி கிராமத்தினர் குடிநீர் கேட்டு ஒன்றிய ஆணையரிடம் மனு வழங்கினர்.

கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்

புதுக்கோட்டை, ஜூன்.29- நெடுவாசல் உட்பட 30-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் ஹைட்ரோ கார்பன்  திட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை நடை பெற்ற கிராம சபைக் கூட்ட த்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மே முதல் நாளில் நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டம் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் நடை முறையில் இருந்ததால் ஒத்தி  வைக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை அனை த்து ஊராட்சிகளிலும் நடந்தது. இந்த கிராமசபைக் கூட்டங்கள் பொதுமக்கள் பங்கேற்புடன் அதிகாரிகள் முன்னிலையில் நடை பெற்றது. இந்தக் கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாகக் கொடு த்தனர். மனுக்கள் குறித்த  விவாதங்களுக்கு பிறகு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் நெடு வாசல், சேந்தன்குடி, கொத்த மங்கலம், மேற்பனைக்காடு மற்றும் திருவரங்குளம், அற ந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள சுமார் 30 கிராம ங்களில் அந்தந்த பகுதி விவ சாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழ்நாட்டில் செய ல்படுத்தக் கூடாது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் மனுக்களாக பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  இது குறித்து விவ சாயிகள் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என்று 2017 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி வரு கிறோம். கிராம சபை  தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டிருக்கும் நிலை யில், காவிரி பாசனப் பகுதியில் ஹைட்ரோ கார்பன்  திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து அறி வித்து வருவது வேதனை அளிக்கிறது. அதனால் மீண்டும் தீர்மானம் நிறை வேற்றி உள்ளோம் என்றனர்.