tamilnadu

img

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரை தவறாக பேசிய பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கைக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்....

திருச்சிராப்பள்ளி:
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம்உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமாரிடம் தவறாக பேசிய ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மீது புகார் மனு அளிக்கப் பட்டதற்கு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யக் கோரியும், தளுகை கிராமத்தில்நூறு நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்துவேலை வழங்கக் கோரியும், முழுமையான ஊதியம் ரூ.256 வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயம் சங்கம்சார்பில் தளுகை கிராம ஊராட்சி மன்றஅலுலவகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து உப்பிலியபுரம் வட் டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில் சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், அகில இந்தியவிவசாய தொழிலாளர் சங்க மாநிலசெயலாளர் பழநிசாமி, ஊராட்சி ஒன்றியசெயலாளர் ஆர்.முத்துக்குமார் மற்றும்அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க முக்கிய உறுப்பினர்கள், தொட்டியம் காவல் ஆய்வாளர், உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளர், உப்பிலிய
புரம் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தளுகை கிராம ஊராட்சி மன்றதலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பணிமேற்பார்வையாளர் மீது அளிக்கப்பட்ட புகார் மனு தொடர்பாக சம்மன் அனுப் பப்பட்டு, நவ.9 அன்று விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பது. ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மீதுதுறை ரீதியான நடவடிக்கைக்கு மாவட்டஆட்சியருக்கு பரிந்துரை செய்வது. பணிதளத்தில் அளவீடு செய்து அதற்கானஊதியம் வழங்கிட நடவடிக்கை மேற் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.