விபத்தில் பள்ளி மாணவர் பலி
கரூர், ஜூன் 19- கரூர் அடுத்த காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ்- மேரி தம்பதி மகன் சுனில்(18). இவர், கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்த சுனில் மீது காந்தி கிராமம் அருகே எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் சுனில் சம்பவ இடத்திலேயே பலி யானார். இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் தெருநாய் கடித்து பலி
தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதியை ஒட்டி யுள்ள வனப்பகுதியில் கோடைக் காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வனவிலங்கள் தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேடி வந்த பெண் புள்ளிமானை, அப்பகுதி தெருநாய்கள் கடித்துக் குதறி யது. இதில் படுகாயமடைந்த மான் அங்கேயே இறந்து கிடந்தது. இதனை தொடர்ந்து, பொதுமக்களும், பள்ளி ஆசிரியர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனக் காப்பாளர் முருகானந்தம், வனக் காவலர் சீனிவாசன் இருவரும் இறந்த மானை, ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிபிஎம் ரசீது வழங்கும் விழா
நாகப்பட்டினம், ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகர உறுப்பினர்களுக்குக் கட்சி ரசீது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ப.சுபாஷ்சந்திரபோஸ், ந.காவி யன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன் சிறப்புரை யாற்றினார். சு.சிவகுமார், பி.ஜீவா, சொ.கிருஷ்ணமூர்த்தி, செண்பகம், கே.ராமதாஸ், சு.மணி, கா.காந்திநேசன், பி.முனியாண்டி, கா.மணியன், டி.தினேஷ்பிரபு, ஆர்.ராமமூர்த்தி, ஜி.ராஜேஸ்வரி, ஆர்.நாகேஸ்வரி, ஆ.மீ.ஜவகர், கே.தவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர் கட்சி ரசீது பெற்றுக் கொண்டனர்.