tamilnadu

நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜுலை 20- கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை, வருமானம் இழந்து வாழும் ஏழை-எளிய பெண்களிடமும், சுயஉதவி பெண்கள் குழுவினரிடமும், நுண் நிதி கடன் நிறுவனங்கள் தாங்கள் கொடுத்த தொகையை வசூல் செய்திட மிகுந்த நெருக்கடி கொடுப்பதை கண்டித்தும், காலஅவகாசம் கோரியும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம், வளையெடுப்பு கிராமத்தில் ஒன்றியத் தலைவர் ஜெயந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்சியின் ஒன்றியச் செயலாளர் காமராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சுப்ரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். கட்சி உறுப்பினர்கள், மாதர் சங்க கிளை உறுப்பினர்கள், சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.