திருச்சிராப்பள்ளி, அக்.17- பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரை வார்ப்பது, ராணுவம், நிலக்கரிச் சுரங்கத்தை 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பது. பிஎஸ்என்எல், துப்பாக்கி தொழிற்சாலை, ரயில்வே, ஏர் இந்தி யா போன்றவற்றில் பெரும்பகுதியை தனியா ருக்கு தாரை வார்ப்பது போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடரா ஜன், சிபிஐ ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ், மல்லிகா, லெனின், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பழனிசாமி, அருணன், பெல் இடைக் கமிட்டி செயலாளர் அருள்மொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் பக்கிரிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜ் குமார், ஜெயகுமாரி, ஜான்சன்ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.
நாகப்பட்டினம்
இந்திய நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில், புதன்கிழமை அன்று மாலை, நாகப்பட்டினம் அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான நாகைமாலி தலைமை வகித்தார். சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், ஜி.ஜெயராமன், பி.சீனிவாசன், சி.வி.ஆர். ஜீவானந்தம், ஏ.வி.சிங்காரவேலன், பி.மாரியப்பன், சி.பி.ஐ.சார்பில் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். சி.பி.எம். சார்பில் வேதாரணியம் ஒன்றி யச் செயலாளர் வி.அம்பிகாபதி, தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, நாகை நகரப் பொறுப்புச் செயலாளர் சு.மணி, திரு மருகல் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயபால், குத்தாலம் ஒன்றியச் செயலாளர் சி.விஜய காந்த், மயிலாடுதுறை வட்டச் செயலாளர் ஆர். மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.கணேசன், பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிர மணியன், செந்தில்நாதன், என்.எம்.அபு பக்கர், எம்.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற் றனர். சி.பி.ஐ.சார்பில் கீழையூர் ஒன்றியச் செய லாளர் டி.செல்வம், சோமு.இளங்கோ, வேதார ணியம் ஒன்றியச் செயலாளர் சிவகுரு பாண்டி யன், திருமருகல் ஒன்றியச் செயலாளர் ஆர். கே.பாபுஜி, சீர்காழி ஒன்றியச் செயலாளர் மு.செல்லப்பன், விவசாயிகள் சங்க மாநி லக்குழு உறுப்பினர் வி.சரபோஜி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.