திருச்சிராப்பள்ளி, பிப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை விளக்க தெருமுனை கூட்டம் மற்றும் நிதியளிப்பு கூட்டம் செவ்வாயன்று ஜெய்நகர் பாலம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். கூட்டத்தில் திருச்சி, தஞ்சை மெயின் சாலையில் இருந்து எழில்நகர் வரை உய்யகொண்டான் கரை சாலைகளை சீரமைக்க வேண்டும். கூத்தைப்பார் பேரூராட்சி கிருஷ்ணசமுத்திரம் பஞ்சா யத்து பகுதியில் உள்ள சாக்கடை களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். கணபதி நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவ ராஜ், மல்லிகா, ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஒன்றிய கமிட்டி உறுப்பி னர்கள், கிளை நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ 50,000-ஐ புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலனிடம் வழங்கி னர். ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கர் நன்றி கூறினார்.
மணப்பாறை
இதேபோன்று மணப்பாறை ஒன்றி யம் மருங்காபுரி பஸ்ஸ்டாண்ட் அருகில் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக் கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் சின்னையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிதம்பரம், மருங்காபுரி வட்டச் செயலாளர் தியாகராஜன், வட்டக்குழு உறுப்பினர் அழகர்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக மருங்காபுரி ஒன்றியச் செயலாளர் தியாகராஜன், வட்டக்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.25,000-ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திர னிடம் வழங்கினர். முடிவில் ஒன்றி யக்குழு உறுப்பினர் நாகராஜன் நன்றி கூறினார்.