tamilnadu

img

அரியலூர் மற்றும் திருத்துறைப்பூண்டி முக்கிய செய்திகள்

திருமானூர் ஒன்றிய அலுவலகம் மூடல்

அரியலூர், ஆக.7- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும்  அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தால், ஊராட்சி ஒன்றிய அலு வலகம் 3 நாள் மூடப்பட்டு உள்ளது. அந்த அலுவல கத்தில் பணிபுரிந்த அலுவல ர்கள் மற்றும் அவர்களின் குடு ம்பத் தினருக்கு கொரோனா  தொற்று பரிசோதனை நட த்தப்பட்டு வருகிறது. சம்ப ந்தப்பட்ட அதிகாரி அரிய லூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரு கிறார்.

கொரோனா  விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி, ஆக.7- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நக ரத்தில் உணவுத்துறை அமை ச்சர் காமராஜ் நகராட்சியில் பணியாற்றக்கூடிய துப்பு ரவு காவலர்களுக்கும் அங்கே பணிபுரிகிற பணியாளர்க ளுக்கும் கபசுர குடிநீர் மற்றும்  முகக்கவசம், சத்து மாத்திரை கள் விழிப்புணர்வு துண்டு பிர சுரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சி அதிமுக  நகர செயலாளர் டி.ஜி.சண்மு கசுந்தரம் தலைமையில் நடை பெற்றது.

கலைஞர் கருணாநிதி நினைவுதின அஞ்சலி

அறந்தாங்கி, ஆக.7- கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அறந்தாங்கியில் புதுக்கோட்டை சாலை கலைஞர் மன்றம் அருகே நகரச் செய லாளர் ஆனந்த் தலைமையில் கலைஞர் மன்ற  காப்பாளர் காந்திநாதன், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ.ரகுபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கலைமைணி உள்ளிட்ட பலர் கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மன்னார்குடி கலைஞரின் 2-வது நினைவு தினம் மன்னார்குடி நகரில் கடைபிடிக்கப்பட்டது. மன்னார்குடி நகர திமுக அலுவலகத்தில் வை க்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்பட த்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.

கொள்ளிடம் கால்நடை மருத்துவமனைகளில் மருந்து-மாத்திரைகள் இல்லாததால் பாதிப்பு

சீர்காழி, ஆக.7- நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சாமியம், மாதானம், முதலைமேடு, எடமணல் ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ மனைகள் உள்ளன. இதேபோல், மாதிரவேளூர், அகரஎலத்தூர், புதுப் பட்டினம், கீழமாத்தூர் ஆகிய இடங் களில் கால்நடை துணை நிலை யங்கள் உள்ளன.  கால்நடை மருத்துவமனைகள் ஒரு நாள் முழுவதும் காலை முதல் மாலை வரை இயங்கக் கூடியவை. கால்நடை துணை மருத்துவ நிலை யங்கள் காலைப் பொழுதில் மட்டும் வாரத்திற்கு 3 நாள் வீதம் இயங்கக் கூடியதாகும். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதி லிருந்து கால்நடைகளுக்கு சினை ஊசி போடுவது நிறுத்தப்பட்டது.  இதுகுறித்து இதுவரை கால்நடை பராமரிப்பதுறை சிறிதும் கவனம் செலுத்தவில்லை. ஆனால் கால்நடை வளர்த்து வரும் விவசாயிகள் வேத னையடைந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான கால்நடை களுக்கு கருவூட்டல் செய்து கொள்ள முடியவில்லை. ஆடு, மாடு மற்றும் கோழிகள் நோயினால் பாதிக்கப் படுகின்றன.  கால்நடை மருத்துவமனை களுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு செல்வதற்கு ஊரடங்கு தடையாக உள்ளது. கால்நடை களுக்கு மருத்துவ உதவியை மேற் கொள்ள மருத்துவர்களோ, மருத்துவ உதவியாளர்களோ கொரோனா வால் கிராமங்களுக்கு வருவது கிடையாது. மருந்து மாத்திரைகள் வாங்க மருத்துவமனைக்குச் சென்றால் மருந்துகள் இருப்பு இல்லை என்று சொல்கின்றனர். தனி யார் மருந்தகங்களில் உரிய மருந்து-மாத்திரைகள் கிடைப்பதில்லை.  கொள்ளிடம் அருகே சாமி யத்தில் உள்ள மருத்துவமனையை நம்பி சுமார் 30-க்கும் மேற்பட்ட கிரா மங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாடுகள் 200-க்கும் மேற்பட்ட எருமை கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் மற்றும் செல்ல பிராணிகள் உள்ளன. இதே போல் மற்ற மருத்துவமனைகளை நம்பி மீதம் 170 கிராமங்கள் உள்ளன. கால் நடைகளுக்கு உரிய சிகிச்சையும் கிடைக்கவில்லை. வாழ்வாதாரம் அளிக்கும் கால்நடைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதற்கான உணவு குறித்தும் எந்த நடவடிக்கையையும் கால்நடை பராமரிப்புத்துறை மேற்கொள்ளவில்லை.  கால்நடை மருத்துவமனைகளில் தற்பொழுது வெறும் 30 சதவிகித மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் கோமாரி நோய் தடுப்பூசி போடு வதும் நிறுத்தப்பட்டுள்ளது. கால் நடைகளை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி ஊராட்சியில் 2600 மரக்கன்றுகளை நட முடிவு

திருத்துறைப்பூண்டி, ஆக.7- திருவாரூர் மாவட்டம் திரு த்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஆயிரம் மர க்கன்றுகள் நடுவது குறித்த  ஆலோசனைக் கூட்டம் திரு த்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர்  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் பாஸ்கர் கூறுகையில், கஜா  புயல் பாதிப்புக்கு பிறகு  பலன் மற்றும் நிழல்  தரும்  மரங்கள் திருத்துறைப்பூ ண்டி ஒன்றியம் முழுவதும்  ஏராளமாக அழிந்துவிட்டன. அதனை ஈடுசெய்யவே தற்போது மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்ப டுத்தப்படுகிறது. ஒரு ஊராட்சிக்கு 50 வீதம் 1600 தென்னங்கன்றுகளும், ஒரு ஊராட்சிக்கு 1000 கன்றுகள் வீதம் புளி, வேம்பு, புங்கை, வேங்கை, வில்வம், பலா போன்ற மரக்கன்றுகளையும் நடு வதற்கு ஒன்றியக் குழு சார்பில் வழங்கப்படும். மேலும் ஆண்டுக்கு 10 ஊரா ட்சிகளை தேர்வு செய்து  அனைத்து வீடுகளுக்கும் தலா இரண்டு மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. இதனை பராமரித்து, பாது காத்து வருகிற அடிப்ப டையில் கள ஆய்வு மேற்கொ ள்ளப்படும். தொடர்ந்து அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்ட் 15 அன்று அதிக மரக்கன்றுகளை பாதுகாத்து வளர்த்து எடுத்துள்ள ஊரா ட்சிகளுக்கு விருது வழங்கு வதோடு, சிறப்பு நிதியும் ஒது க்கப்படும். வருகிற 5 ஆண்டு களில் 2 லட்சம் மரக்கன்று களை திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.

பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்!

மாணவர் சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு  

சீர்காழி, ஆக.7- புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து தொழில் நுட்பக் கல்லூரி  முதல்வர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புத்தூர் சீனிவாசா  சுப்பராயா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு  மாணவர் சேர்க்கைக்கான இ-சேவை மையமாக விளங்குகிறது. பாலிடெ க்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணைய  தளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம்  ஆண்டு  டிப்ளமோ சேர்க்கைக்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்க ஆக. 20 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பேராவூரணி வட்டாட்சியர் எச்சரிக்கை 

தஞ்சாவூர், ஆக.7- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் தற்போது கொரோ னாத் தொற்று பரவி வருகிறது. நோய்த் தொற்று உடையோருக்கு போதிய  விழிப்புணர்வு இல்லாததால், மற்றவர்களுக்கும் பரவும் நிலை உள்ளது.  பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மக்கள் எதிர்பாராத விதத்தில் தங்க ளுக்கு கொரோனாத் தொற்று வரப்பெற்றால், அச்சப்படாமலும், மற்ற வர்களை பீதிக்குள்ளாக்காமலும் இருக்க வேண்டும். பதற்றமடையக் கூடாது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், எக்காரணம் கொண்டும் சொந்த வாகனத்தில் கொரோனா மையங்களுக்கு செல்லக் கூடாது. அர சின் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மட்டுமே, உரிய பாதுகாப்பு முறைக ளுடன் செல்ல வேண்டும். இதனை மீறும்பட்சத்தில் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தெரி வித்துள்ளார்.