tamilnadu

img

பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும் நலவாழ்வு இயக்கம் வலியுறுத்தல்

தருமபுரி, நவ. 1-  கொரோனா காலத்தில் பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும் என நலவாழ்வு இயக்கம் வலியு றுத்தியுள்ளது. நலவாழ்வு இயக்கத்தின் சார்பில் கொரோனா காலத் தில் மக்களுடைய சுதாதாரம் குறித்து களஆய்வின் அடிப் படையில் கலந்தாய்வு கூட்டம் தருமபுரி சந்திரா ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சங்கர் தலைமை வகித்தார். தரும புரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, சிஐ டியு மாநில செயலாளர் சி.நாகராசன், அனைத்திந்திய ஜன நாயாக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸா மேரி, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில செய லாளர் ஜி.நாகராஜன், சுகாதார ஆய்வாளர் சி.மாதம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், கொரோனா காலத்தில் பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ மனையின் செயல்பாட்டை கண்காணித்து முறைபடுத்த வேண்டும். கொரோனா காலத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலை யம் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் உள்ள கழி வறைகளை பராமரிக்க வேண்டும். கொரானோ தடுப்பு பணி யில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபக ரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.