சென்னை, ஏப்.19 - தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு முடிவெடுத்து ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமி ழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக் காலத்தில் பொது மக்களின் நடமாட்டத்துக்கும், கடைகளை திறக்கவும் விதிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடு களை தளர்த்துவது குறித்து மத்திய அரசு வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசு கடந்த 15 ஆம் தேதி வெளியிட்ட ஆணையில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலை கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடி வெடுத்து அறிவிக்க கோரியிருந்தது.
இதுகுறித்து அரசுக்கு ஆலோசனை அளிக்க மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள் ளது. அந்த குழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனை களை முதல மைச்சரிடம் ஏப்ரல் 20 ஆம் தேதி தெரிவிக்க உள்ளது என்றும், இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார். இது குறித்து தமிழக அரசு ஆணைகள் வெளி யிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.