tamilnadu

கேள்விக்குறியாகும் 3000 பேரின் வேலை... ...1ம் பக்கத் தொடர்ச்சி

...1ம் பக்கத் தொடர்ச்சி

ஆணையில், பணியாளர்களுக்கு ரூ.15,971 மாத சம்பளம் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தாலும் மாதசம்பளம் சுமார் ரூ.12 ஆயிரம் தான் தர முடியும்என்றும் புதிய ஒப்பந்த நிறுவத்தினர் கூறுவதாகத் தெரிகிறது.

மாநிலம் முழுவதும் இதே நிலை
திருப்பூர் மட்டுமல்லாது தமிழகத்தில்சென்னை பெருநகரம் உள்பட அனைத்துமாநகராட்சிகளிலும் 11 ஒருங்கிணைப் பாளர்கள், 230 மேற்பார்வையாளர்கள் மற்றும் 2ஆயிரத்து 846 பரப்புரையாளர்கள் என மொத்தம் 3ஆயிரத்து 87 பேர் இத்திட்டத்தில் பணி செய்து வருகின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளும் உண்டு. பரப்புரையாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பணியில் வேலை செய்வோர், கிட்டத்தட்ட அனைவருமே பட்டதாரிகள். பொறியியல், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்தவர்கள் ஆவர். திருமணமாகாத இளைஞர்கள் மட்டுமின்றி திருமணம் முடித்து மனைவி, குழந்தைகளுடன் இருக்கக்கூடியவர்களும் உள்ளனர். இவர்களின் பணி தொடர்வதற்கு தொடர்ந்து பணம் கேட்டுமிரட்டி வருவதுடன், புதிய ஒப்பந்த நிறுவனம் இதுவரை பணி ஆணையும் தரவில்லை. 

முந்தைய ஒப்பந்த நிறுவனமும் இரண்டு மாத சம்பளத்தைத் தராமல் இருக்கிறது.செப்டம்பர் மாதத்துடன் அந்நிறுவன ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் புதிய நிறுவனத்தின் கீழ் அக்டோபர் முதல் வேலை செய்து வருகின்றனர். எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடந்த 20 நாட்களாக வேலை வாங்கி வருகின்றனர். பணம் தராவிட்டால் வேலையை விட்டு நிறுத்துவோம் என மிரட்டுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் இவர்கள் திகைத்து நிற்கின்ற னர்.

மறைமுக முயற்சி
ஒருபுறம் இவர்களிடம் பணம் கொடுக்கவேண்டும் என கட்டாயப்படுத்தி வரும்நிலையில், மறுபுறம் புதிய பணியாளர் களைச் சேர்க்கவும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மறைமுகமாக முயற்சி மேற்கொண்டுள்ளன. வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் நிலையில், புதிதாக விண்ணப்பித்திருப்போரிடமும் ஏற்கெனவே சொன்னது போல, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒப்பந்தப்பணி, பின்னர் நிரந்தரப் பணி என ஆசை வார்த்தை கூறி, பரப்புரையாளர் பணிக்கு ரூ.2.30 லட்சம், மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.3.70 லட்சம்,ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ரூ.4.50 லட்சம் என கையூட்டு கட்டணம் நிர்ணயித்து பணம் கேட்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிலர் உள்ளாட்சி நிர்வாகங்கள் கொடுக்கும் நெருக்கடி தாங்காமல் கொடுத்த பணம் போனாலும் பரவாயில்லை என்று வேலையை விட்டும் நின்றுவிட்டனர். மற்றும் சிலரோ, இனிமேல்வேறு எந்த வேலைக்குச் சென்று பிழைப் பது என தடுமாற்றத்துடன் உள்ளனர்.எனினும் அனைத்து மாநகராட்சிகளிலும் வேலை செய்யும் இந்த பணியாளர்கள் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து தங்கள் நிலையைப் பற்றி பரஸ்பரம் பகிர்ந்து வருகின்றனர். தூய்மை பாரதத் திட்டத்தில், படித்த இளைஞர்களை உள்ளாட்சி நிர்வாகங்களும், தனியார் ஒப்பந்த நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து வஞ்சித்து வருவது அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கு வேலை நிரந்தரம் வேண்டும், அனைத்துஉள்ளாட்சிகளிலும் ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் முழுமையாகத் தர வேண்டும், தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் பந்தாட்டத்துக்கு தங்களை ஆளாக்கக்கூடாது என அவர்கள் கோபாவேசத்துடன் தெரிவித்தனர். தமிழக அரசு இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி 3ஆயிரம் பேரின் வேலையைப் பாதுகாக்க, உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

===வே. தூயவன் ===