tamilnadu

img

குலுங்கியது மிட்னாப்பூர்

மம்தா அரசின் போலீஸ் தடைகளை தகர்த்தது செங்கொடி 


கொல்கத்தா, செப். 27- கடந்த வாரம் மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூர் நகரம் செங்கொடிகளின் மிகப்பெரும் பேரணி அணிவகுப்பை மீண்டும் ஒருமுறை கண்டது. மம்தாவின் திரிணாமுல் அரசின் தடைகளை மீறி  லட்சக்கணக்கானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். செப்டம்பர் 22 அன்று பேரணி யில் பங்கேற்பதற்காக மிட்னாப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பேருந்துகளை மாநில அரசாங்கம் பஸ் உரிமையாளர்களை மிரட்டி ரத்துசெய்து விட்டது. அடக்குமுறையால் பேருந்து கள் தடுக்கப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் துணிவுடன் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கால்நடையாகவே நடந்து பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றனர்.

ஜங்கல்மகால் என்று அழைக்கப் படும் இந்தப் பகுதியில்தான் திரிணா முல், மாவோயிஸ்ட் குண்டர்களின் கூட்டுத் தாக்குதலால் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் 200 பேர் படுகொலை செய் யப்பட்டனர். அத்தகைய குண்டர் களுக்கு இந்தப் பிரம்மாண்டமான பேரணி ஓர் எச்சரிக்கை விடுப்பதாக இருந்தது. இதே பகுதியில்தான் 2016- ஆம் ஆண்டு நாராயணகட் சட்ட மன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்த லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளரும் கட்சியின் தற்போ தைய மாநிலச் செயலாளருமான  டாக் டர் சூர்யகாந்த மிஸ்ரா போட்டியிட்ட போது அவருக்கு வாக்களிக்கவிடாமல் செய்வதற்காக இந்தக் குண்டர்கள் வாக்காளர்களை வீட்டிலேயே மிரட்டித் தடுத்துவிட்டனர். கடுமையான தடை விதித்தார்கள்; மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களைக் கொலைசெய்ய முயன்றனர்.

தற்போது, லட்சக்கணக்கில் தோழர் களும் மக்களும் இந்தப் பேரணிக் கூட்டத்திற்கு வந்து பங்கேற்றது திரிணா முல், மாவோயிஸ்ட் குண்டர்கள் மற்றும் பாஜக குண்டர்களுக்கு  ஓர் எச்சரிக்கை யாக இருந்தது. இவர்களின் கொடும்  வன்முறைகளைத் தீரமுடன் எதிர் கொண்டு முறியடிப்போம் என்பதை நிரூ பிப்பதாக இந்தப் பேரணி அமைந் திருந்தது. பேரணிப் பொதுக்கூட்டத்தில் சூர்ய காந்த மிஸ்ரா பேசுகையில், மேற்கு மிட்னாப்பூரில் மக்களின் உரிமைகளைக் காப்பாற்றப் போராடுவது அவசியம் என்பதை இந்தப் பேரணி நமக்கு எடுத்துரைக்கிறது என்றார். 1999 முதல் இன்றுவரை இந்தப் பிராந்தியத்தில் மம்தாவின் அரசாங்கமும் திரிணாமுல் கட்சியும் செய்யாத சதிகள் இல்லை என்றும், கேஷ்பூர் பிராந்தியத்தில் இடதுசாரி ஊழியர்கள் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலை மேற்கு மிட்னாப்பூரிலும் தொடர்ந்தார்கள் என்றும் கூறினார். கார்ப்பரேட் முத லாளிகளுக்குச் சாதகமான புதிய தாராள மயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகிற பாஜகவுக்கு திரிணாமுல் ஆதரவு அளித்தது என்றார். பாஜக அரசின் கொள்கைகளால் நஷ்ட மடைந்த மக்களின் போராட்டம் முக்கிய மானது என்றார்.

போலீஸ் மற்றும் குண்டர்களின் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த தோழர்களின் குடும்பத்தி னர் அனைவரும் இந்தப் பேரணிப் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். சூர்யகாந்த மிஸ்ரா மற்றும் ராபின்தேவ், தீபக்சர்க்கார் முதலான தலைவர்களும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினர். கட்சியின் மிட்னாப்பூர் மாவட்டச் செயலாளர் தருண்ராரு பேரணிக்குத் தலைமை வகித்தார்.