கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 32 பேர், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரை சேர்ந்தவர்கள் ஆவர். பாரதி நகரில் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே எஸ் அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ராகவன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சன்முகராஜ், கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமாசங்கர், கயத்தாறு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனிப்பான்டி, ராசையா, தவமனி, சுந்தரி, அக்கம்மாள், ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.