அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதி
திருவனந்தபுரம், மார்ச் 22- கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எந்த அவசர சூழலையும் எதிர்கொள்ளும் முன் தயாரிப்பு களை கேரள சுகாதாரத்துறை மேற்கொண்டுள் ளதாக அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரி வித்துள்ளார். கோவிட் 19 பாதுகாப்பை மாநிலத்தில் வலுப் படுத்தும் அதே வேளையில், சுகாதாரத் துறை திட்டம் ஏ, பிளான் பி மற்றும் பிளான் சி ஆகிய வற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட 18 குழுக்களில் உட்கட்ட மைப்பு குழுவும், தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைப்பு குழுவும் இதற்காக அமைக் கப்பட்டவையாகும். நேர்மறை முடிவுகள் கிடைக்கப்பெற்றவர்கள் அல்லாமல் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு நோய் அறி குறிகளோ, வேறு உடல் நலக் கோளாறுகள் இருந்தாலோ தனிமை அறைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இது முன்னெச்ச ரிக்கையாக சுகாதாரத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். ஒவ்வொரு திட்டத்துக் கும் ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மருந்துகள், பாதுகாப்பு உபகர ணங்கள், செயற்கை சுவாசக்கருவி உள்ளிட்ட வசதிகளை பெருமளவுக்கு அதிகரித்து வருவ தாக அமைச்சர் கூறினார்.
பிளான்-ஏ
ஜனவரி 30இல் சீனாவின் வுகானிலிருந்து வந்த மாணவர்கள் மூலம் கேரளத்தில் முதல் முறையாக கோவிட் 19 கண்டறியப்பட்டது. அப்போது பிளான் ஏயும் பிளான்-பி-யும் உரு வாக்கப்பட்டு பிளான்-ஏ அமலாக்கப்பட்டது. 50 அரசு மருத்துவமனைகள் 2 தனியார் மருத்துவ மனைகள் என 52 நிறுவனங்களை உட்படுத்தி பிளான்-ஏ அமலாக்கப்பட்டது. 974 தனிமை படுக்கைகள் தயார் நிலையிலும், 242 தனிமை படுக்கைகள் தேவை ஏற்பட்டால் பயன்படுத்த வும் கண்டறியப்பட்டிருந்தன. அதன்படி நோய் கண்டறியப்பட்ட 3 நபர்களை அதிலிருந்து மீட்க வும் மற்றவர்களுக்கு பரவாமலும் முதல்கட்டம் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டது.
பிளான்-பி
வுகானிலிருந்து நோயுடன் முதலாவது வந்த போது பிளான்-ஏ-யின் தொடர்ச்சியாக பிளான்-பி உருவாக்கப்பட்டது. அதன்படி 71 அரசு மருத்துவமனைகள், 55 தனியார் மருத்துவ மனைகள் என 126 நிறுவனங்களை உட்படுத் தப்பட்டன. 1408 தனிமை படுக்கைகள் தயார் நிலையிலும் 17 தனிமை படுக்கைகள் தேவை யெனில் பயன்படுத்தவும் கண்டறியப்பட்டன. இப்போதும் பிளான்- ஏ அமல்படுத்தப்படுகிறது. பிளான்-ஏ-யில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிமை படுக்கைகள் உள்ளதாலும் அந்த அளவுக்கு நோயாளிகள் இல்லாததாலும் பிளான்- பி க்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை.
பிளான்-சி
பிப்ரவரி 29இல் இத்தாலியிலிருந்து வந்த பத்தனம்திட்டாவைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குடும்பத்திற்கும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்து நெருங்கிய 2 உறவினர்களுக் கும் மார்ச் 8இல் கோவிட் 19 உறுதி செய்யப் பட்டதைத் தொடர்ந்து பிளான்-சி உரு வாக்கப்பட்டது. எச்சரிக்கையாக இருந்து சமூக இடைவெளியை மக்கள் முறையாக மேற் கொண்டால் பிளான்-பி-யே போதுமானதாக இருக்கும். அதல்லாமல் பெருமளவுக்கு கோவிட் 19 சமூக பரவல் ஏற்பட்டு அதிகமா னோர் ஒரே நேரத்தில் சிகிச்சைக்கு வந்தால் பிளான்-சி-க்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களின் முழுமையான ஒத்துழைப்புடன் பிளான்-சி அமலாக்கப்படும். இதற்காக பிர தான அரசு மருத்துவமனைகளில் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவசரம் அல்லாத நோயாளிகளை அங்கிருந்து மாற்றி கோவிட் 19 சிகிச்சைக்கு உரிய வசதிகள் செய்யப்படும். அதன்படி அரசு 81 தனியார் 41 என மொத்தம் 122 மருத்துவமனைகளில் 3028 தனிமை படுக் கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதல்லாமல் பிளான்-பி, பிளான்-சி-க்காக 218 ஐசியு படுக்கை களும் தயார் நிலையில் உள்ளன. தேவை யெனில் பிளான் சி-யில் கூடுதல் தனியார் மருத்து வமனைகள் பங்கேற்பது உறுதி செய்யப்படும்.
கொரோனா கேர் சென்டர்
வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்க ளிலிருந்தும் வரும் தங்கும் வசதி இல்லாத வர்கள் வசிப்பதற்காக முதல்வர் உத்தர வுப்படி பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கொரோனா கேர் சென்டர்கள் துவக்கப்பட் டுள்ளன. இவர்கள் மூலம் வேறு யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவே பாது காப்பாக தங்குமிடம் அளிக்கப்படுகிறது.
இப்போது சிலர் மட்டுமே இந்த கேர் சென்டர்களில் உள்ளனர். ஆனால், கொரோனா வைரசின் சமூகப் பரவல் ஏற்பட்டால் தனிமை வசதிக்காக பிளான் சி-யின் பகுதியாக இத் தனை அதிகம் கொரோனா கேர் சென்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 21,866 நபர்களை ஒரே நேரத்தில் இந்த கேர் சென்டர்களில் தங்க வைக்க முடியும். அரசு நிறுவனங்களுக்கு இணையாக தனியார் நிறுவனங்களும் மருத்துவமனைகளும் உதவ முன்வந்துள்ளன. மேலும் அதிக அளவிலான நிறுவனங்கள் கேர் சென்டர்களாக செயல்பட விருப்பம் தெரி வித்துள்ளன.
அரசு இத்தனை பெரிய முன்னேற்பாடு களைச் செய்தாலும் மக்கள் அனைவரும் ஒரு மனதாக எச்சரிக்கை மேற்கொண்டால் மட்டுமே கொரோனா வைரசை வலுவாக எதிர்கொள்ள முடியும். அனைவரும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும். நோய் பாதிப்புள்ள பகுதிகளி லிருந்து வந்தோர் கட்டாயமாக வீட்டுக் கவ னிப்பில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டைவிட்டு வெளியில் இறங்கவோ, பிறருடன் பழகவோ கூடாது. அப்படி செய்தால் மற்றவர்களுக்கு பரவவும், சமூகத்திற்கு வெகு விரைவில் படரவும் வாய்ப்பாகிவிடும். எனவே தான் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல்லாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.