தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக உள் மாவட்டங்கள் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் இன்றும் நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல், குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது.