tamilnadu

img

13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.... வானிலை ஆய்வு மையம்

சென்னை:
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில்  அநேக இடங்களில் லேசான முதல் மிதமான பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி,விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதேபோல் திங்களன்று (நவ.16) சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப் புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.