சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சியை எதிர்த்து நாடு முழுக்க மகத்தான போராட்டங்கள் நடந்து வரு கின்றன. அதைத் தாங்க முடியாத ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் தில்லியில் போராளிகள் மீது தாக்குதல் தொடுத்தது. அதில் 53 பேர் அநியாயமாக மாண்டு போனார்கள். தாக்குதலைத் தடுக்க வேண்டிய காவல் துறையே அதற்கு உதவி செய்த கொடூரம் நிகழ்ந்தது.அமித்ஷாவின் போலீஸ் எத்தகையது என்பதைக் கண்டு உலகமே காறித் துப்பியது. ஆனாலும் தனது போலீசிற்கு நற்சான்றிதழ் வழங்கிய தோடு தேவையற்ற ஆணியாகிய என்பிஆருக்கு பள பளப்பாக பெயிண்ட் அடிக்கும் வேலையைச் செய்திருக்கி றார் அமித்ஷா. அதில் கேட்கப்படும் அனைத்து கேள்விக ளுக்கும் பதில் அளிக்கத் தேவையில்லை, ஆவணங்க ளைக் காட்ட வேண்டியதில்லை, ‘டி’ எனும் சந்தேகத்திற்குரிய குடிமகன் எனும் குறி போடப்படாது என்றெல்லாம் பொளந்து கட்டியிருக்கிறார்!
இவருடைய பேச்சு உண்மையெனில் அதற்கு அவர் செய்ய வேண்டிய ஒரே எளிய காரியம் அந்த என்பிஆர் கணக்கெடுப்பையே கைவிடுவதுதான். கட்டாயமில்லாத விஷயத்தை ஏன் செய்ய வேண்டும்? எதற்கு அதற்கு ரூ. 4000 கோடி செலவு செய்ய வேண்டும்? ஆனால் என்பிஆர் கணக்கெடுப்பு நடக்குமாம், நாம் வேண்டுமா னால் சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்கலா மாம்! பதில் சொல்லாததாலேயே பின்னர் இவர்கள் என்ஆர்சி தயாரிக்கும்போது நம்மை குடிமக்கள் இல்லை எனச் சொல்லும் ஆபத்து இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இப்போ வராது... பின்னர்வரும்...
என்ஆர்சிதான் இப்போது வராது என்கிறார்களே என நினைக்கலாம். இப்போது வராது என்பதன் பொருள் பின்னர் வரும் என்பதாகும். 2019 மக்களவைக்கான பாஜக வின் தேர்தல் அறிக்கையில் இப்படிக் கூறப்பட்டுள்ளது: “சட்டவிரோத குடியேற்றத்தின் காரணமாக சில பகுதிகளின் கலாச்சார மற்றும் மொழி அடையாளத்தில் பெரும் மாறுதல் உள்ளது, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மோசமான விளைவு உள்ளது. எனவே முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பகுதிகளில் தேசிய குடிமக்கள் பதிவேடு வேகமாக அமல்படுத்தப்படும். எதிர்காலத்தில் நாட்டின் இதர பகுதிகளில் என்ஆர்சியை பல கட்டங்களாக நாங்கள் அமல்படுத்துவோம்”.
தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக நாடு முழுவதற்குமான என்ஆர்சியை அறிவித்துள்ள பாஜக அதைக் கொண்டு வராது என்று எப்படி நம்புவது? நம்ப வேண்டும் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ள ஒரு காரியத்தை அது செய்ய வேண்டும். அதாவது 2003ல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் குடியுரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளில் என்பிஆர், என்ஆர்சி பற்றி உள்ளவற்றை நீக்க வேண்டும், அதற்கான சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற வேண்டும்.
சந்தேகத்துக்குரியதாக இருந்தால்... ஆட்சேபணை தெரிவித்தால்...
அந்த விதிகளைப் பாருங்கள். விதி 4 என்ஆர்சி பற்றி பேசுகிறது. அதில் உபபிரிவு 3 கூறுகிறது: “இந்திய குடிமக்களின் உள்ளூர் பதிவேடு தயாரிப்பிற்கும், அதில் பெயர் சேர்ப்பிற்கும் மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) சேகரிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் விபரங்கள் உள்ளூர் பதிவாளரால் சரிபார்க்கப்படும்”. அதில் உபபிரிவு 4 கூறுகிறது: “அப்படி சரிபார்க்கும்போது அந்த விபரங்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்தால் மேலும் விசாரிக்க மக்கள்தொகை பதிவேட்டில் உரிய குறியீடு போடப்படும்”. இப்படித்தான் நம்மை சந்தேகக் கேசாக்கும் ‘டி’ எனப்படும் குறியீடு வரப்போகிறது.
இதையெல்லாம் தாண்டி நமது பெயர் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றுவிட்டாலும் இன்னொரு ஆபத்து இருக்கிறது. அது பற்றி உப பிரிவு 6 பேசுகிறது. அதாவது அந்த பதிவேட்டில் உள்ள ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டி ருப்பதற்கு யாரேனும் ஆட்சேபணை தெரிவித்தால் அது கணக்கில் கொள்ளப்பட்டு விசாரணை நடக்கும். அதில் சிக்கியவர் அலைய வேண்டியதுதான். சங் பரிவாரிகள் யாருக்கு எதிராக ஆட்சேபணை தெரிவி ப்பார்கள் என்பது தெரிந்ததுதான். தாங்கள் எதிரிகளாக நினைக்கும் சகலர் பற்றியும் அவர்கள் ஆட்சேபணை தெரிவிப்பார்கள்! இந்த விதிகள் என்பிஆருக்கும் என்ஆர்சிக்கும் இடை யிலான தொடர்பை தெளிவாகக் கூறுகின்றன. என்பிஆர் என்பதே என்ஆர்சிக்காகத்தான். அந்த என்ஆர்சியோ சங் பரிவாரிகளுக்கு பிடிக்காதவர்களை நாடற்றவர்களாக்கும். எனவே எந்தக் கேள்விகளோடு எந்த வடிவத்தில் வந்தா லும் என்பிஆர் என்பது பெரும் கேடுதான், அது யார் தலை யிலும் கல்லைத் தூக்கிப்போடலாம்.
2003 -ல் சேர்க்கப்பட்டதை நீக்க வேண்டும்
“படியளப்பேன் என்று பாராள வந்தவன் தடி எடுத்தானடி முத்தம்மா/ தடிஎடுத்தும் அதைத் தாங்கிக் கொண்டோம் என்று குடி கெடுத்தானடி முத்தம்மா” என்ற கொடுமைதான் இது. ஆகவேதான் சொல்கிறோம் 2003ல் சேர்க்கப்பட்ட இத்தகைய விதிகளை நீக்க வேண்டும் என்று. அப்படிச் செய்தால்தான் அமித்ஷாவின் பேச்சுக்களை நம்ப முடியும். இல்லையெனில் அவை எல்லாம் ஏமாற்று நாடகங்களே.
அதை உணர்ந்துதான் சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சிக்கு எதிராக ஓர் உறுதியான நிலைபாட்டை எடுத்து முன்னுதாரண மாகத் திகழ்கிறது கேரள அரசு. அதன் வழியில் இப்போது தில்லி யூனியன் பிரதேசமும் சேர்ந்துள்ளது. அதன் சட்ட மன்றத்திலும் என்பிஆர்- என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக அல்லாத மாநிலங்கள் எல்லாம் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இதைச் செய்யாத மாநிலம் தமிழகமே. இங்கே நடப்பது பாஜக அல்லாத அரசா அல்லது பாஜக அரசா எனும் சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது!
நரித்தந்திரம்
இதிலே வருவாய்த்துறை அமைச்சர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார் என்றால் முதலமைச்சரோ பழியைத் தூக்கி எதிர்க்கட்சிகள் மீது போடுகிறார். அவைதாம் தேவை யற்ற அச்சத்தை உருவாக்குகின்றனவாம், போராட்டங்க ளைத் தூண்டுகின்றனவாம்! ஆக சிஏஏ இத்யாதியில் ஒரு குறையும் இல்லை, மோடி அரசு மீது ஒரு குற்றமும் இல்லை. புரியாமல்தான் போராளிகள் களத்தில் நிற்கிறார்கள்! இது போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகும், பொது மக்களை விபரமில்லாதவர்கள் என்று கேவலப்படுத்துவ தாகும். அதுமட்டுமல்ல, சிஏஏ இத்யாதி விவகாரம் எல்லாம் முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கக்கூடியவை எனும் சித்தி ரத்தை உருவாக்கவும் அதிமுக அரசு முனைந்துள்ளது. போராட்டக் களத்திலிருந்து இதர மக்களை பிரித்தெடுக்கும் நரித் தந்திரத்தில் ஈடுபட்டுள்ளது.
இத்தகைய ஆட்சியாளர்களையும் வழிக்கு கொண்டு வரத்தான் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாபெரும் மனிதச் சங்கிலி இயக்கத்தை நடத்தியது, மகத்தான குடி யுரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்தியது. அதன் தொடர்ச்சி யாக மார்ச் 17 காலை 10 மணிமுதல் 24 மணி நேர தொடர் இருப்பு போராட்டத்தை சென்னையிலும், மாவட்ட மற்றும் தாலுகா தலைநகர்களிலும் அது நடத்துகிறது. தமிழகத்தின் 400 இடங்களில் நடக்கப்போகிற இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்கப் போவது நிச்சயம். அதைக் கண்ட பிறகாவது அதிமுக அரசுக்கு புத்தி வருமா என்று பார்ப்போம்.