tamilnadu

img

காரைக்குடி- திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவில் பயணிகள் ரயில்

தஞ்சாவூர், நவ.24- காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை வழியாக விரைவில் சென்னைக்கு பயணிகள் விரைவு ரயில் சேவை மார்ச் 2020 ல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகளிடம், ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மீட்டர் கேஜ் பாதையாக இருந்து அகல ரயில் பாதையாக மாற்று வதற்காக காரைக்குடி - அறந்தாங்கி - பேராவூரணி - பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் வழித்தடத்திலான ரயில் சேவை கடந்த 2012 மார்ச்சில் நிறுத்தப்பட் டது. ஏழாண்டுகளாக ஆமை வேகத் தில் நடைபெற்ற பணி முடிந்து, கடந்த 2019 ஜூன். 1 ஆம் தேதி அன்று டெமு ரயில் மொபைல் கேட் கீப்பருடன், இயக்கப்பட்டது.  அதாவது ரயிலிலேயே பய ணிக்கும் கேட்கீப்பர், அதிலிருந்து இறங்கி ஆளில்லாத ரயில்வே கேட்டை மூடி, ரயில் அங்கிருந்து சற்று தூரத்தில் சென்று நின்றதும், ரயில்வே கேட்டை திறந்து வைத்து விட்டு, மீண்டும் ஓடிச் சென்று ரயி லில் ஏறி பயணிக்கும் நிலை இருந் தது. காரைக்குடி - திருவாரூர் இடை யிலான 149 கிமீ தூரத்தில், 59 இஞ்சி னியரிங் ரயில்வே கேட்டும், 13 டிரா பிக் ரயில்வே கேட் என மொத்தம் 72 ரயில்வே கேட் உள்ளது. இதனால் காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்ல பயண நேரம் 6.30 மணி ஆனது.  ஏற்கனவே ஏழாண்டுகளுக்கு முன் பயணிகள் ரயில் 3 மணி நேரத் தில் இதே வழித்தடத்தில் இயக்கப்  பட்டது. பயண நேரம் அதிகரிப்பால், பயணிகள் ரயில் பயணத்தை கை விட்டு, பேருந்துகளில் பயணிக்க தொடங்கினர். ரயில் பயணிகள் வருகை குறைந்தது. மேலும் இந்த டெமு ரயிலில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். மீட்டர்கேஜ் பாதை யில் 3 மணி நேரம் இருந்த பயண நேரம், தற்போது அகல ரயில் பாதை யாக மாற்றப்பட்ட பிறகு, 6.30 மணி நேரமாக, அதாவது கூடுதலாக 3.30 மணி நேரம் ஆனது பயணிகளை கவரவில்லை.  ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர், மற்ற பணியாளர்கள் போதிய அளவு நியமிக்கப்படாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. ரூ.760 கோடியில் அகலப்பாதை பணிகள் முடிக்கப்பட்டும் முறை யான, சரியான ரயில் சேவை வழங் கப்படாதது, பல்வேறு சந்தேகங் களை எழுப்பியது. இதையடுத்து பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஊர் களில் உள்ள ரயில் பயணிகள் சங்கம் சார்பில், போதிய அளவு பணியாளர் களை நியமித்து, டெமு ரயிலாக இயக்காமல், பயணிகள் ரயிலாக, பயண நேரத்தை 3.30 மணி நேரமாக மாற்றியும், வழித்தடத்தில் விரைவு ரயிலை இயக்க வேண்டும். சென்னை, ராமேஸ்வரம் ஆகிய வழித்தடங்களில் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் முனைவர் பாஸ்கரன், பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தன், ஒருங்கிணைப்பாளர் கலியபெரு மாள் உள்ளிட்ட நிர்வாகிகள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருச்சி யில் தெற்கு ரயில்வே கோட்ட மேலா ளர் அஜய்குமார் மற்றும் ரயில்வே உயர் அலுவலர்களை நேரில் சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  அம்மனுவில், “ரயில்வே ஸ்டே ஷன் மாஸ்டர், கேட் கீப்பர், மற்றும் தேவைப்படும் பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காரைக்குடி - திருவாரூர் இடையே பயண நேரத்தை 3 மணி நேரமாக குறைத்து பயணிகள் ரயில் இயக்க வேண்டும். சென்னை மற்றும் ராமேசுவரத்திற்கு விரைவு ர‌யி‌ல்  இயக்க வேண்டும்.  ரயிலில் சென்னை செல்ல விரும்புவோர் இதற்காக மன்னார்குடி அல்லது தஞ்சை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும். அதுவரை தற்கா லிக ஏற்பாடாக மன்னை விரைவு ரயிலை இங்கிருந்து இயக்க  வேண் டும் உள்ளிட்டவை கூறப்பட்டிருந் தது.  கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார், “திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக் கும், பகல் நேர கேட் கீப்பர் நிய மிக்கும் பணி துரிதமாக நடந்து வரு கிறது. தற்போது திருவாரூரில் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் 12.30 க்கு காரைக்குடி சென்றடை கிறது. அதேபோல காரைக்குடியில் இருந்து மதியம் 2.30 க்கு புறப்படும் ரயில் இரவு 9 மணிக்கு திருவாரூர் சென்றடைகிறது. ரயில்வே கேட் கீப்பர் நியமிக்கும் பணி முடிந்தால், பயணநேரம் 3 மணி நேரமாக குறை யும். கூடுதலாக பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களுக்கு தேவை யான இரவு நேர ஸ்டேசன் மாஸ்டர் நியமிக்கும் பணி வரும் மார்ச் 2020 க்குள் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து, மார்ச் (2020) மாதத்தில் விரைவு ரயில் இயக்கப்படும். இதற் கிடையே அடுத்த மாதம் டிசம்பர் முதல் வாரத்தில் டெமு ரயிலுக்கு பதிலாக பயணிகள் ரயில் பயண நேரம் குறைத்து (3 மணி நேரம்) இயக்கப்படும்” என்றார்.