tamilnadu

img

பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு பயிற்சி

  தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான, குறு வளமைய அளவிலான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் சி.சுகுணா தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) வேம்பையன் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சித்ரா பயிற்சி அளித்தார். பயிற்சி வகுப்பில் 13 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 78 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.