tamilnadu

தேசிய அறிவியல் மாநாட்டிற்கு தஞ்சை பள்ளி மாணவிகள் தேர்வு

தஞ்சாவூர், நவ.19- திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்ட மாணவிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.  நவம்பர் 16,17 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டம் ஆர்க்காடு மகா லெட்சுமி மகளிர் கல்லூரி யில் நடைபெற்ற மாநில அள விலான குழந்தைகள் அறிவி யல் மாநாட்டில், தஞ்சை மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 18 ஆய்வு கட்டு ரைகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது,   அதிலிருந்து மாரியம்மன் கோவில் சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கள் திரிஷா மற்றும் காயத்ரி ஆகியோரால் சமர்ப் பிக்கப்பட்ட Awareness on Menstrustation என்ற ஆய்வுக் கட்டுரை டிசம்பர் 27 ஆம் தேதி முதல் 31 தேதி வரை கேரள மாநிலம் திரு வனந்தபுரத்தில் அகில இந்திய அளவில்  நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநில மாநாட்டில் பங் கேற்று சான்றிதழ் பெற்ற தஞ்சாவூர் மாவட்ட மாண வர்களுடன் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுப்பிர மணி, மாநில துணைத் தலை வர் முனைவர் வெ.சுகுமா ரன், மாநிலச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஸ்டீபன்நா தன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் லெ.முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் வீ.ராஜசேகர் மற்றும் வழி காட்டி ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர்.