tamilnadu

img

ஆசிய அளவில் பழமையானது தஞ்சாவூர் அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவு தரம் உயர்வு

தஞ்சாவூர், டிச.9- இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, அதன் அமைதியை உணர்த்தும் வகையில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில், கண் மருத்துவ பிரிவுக்கு 13.12.1919 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. கண் மருத்துவப் பிரிவு என்றாலும், இங்கு, கண் புரை அறுவை சிகிச்சை, கரு விழி, கண் அழுத்த நோய், விழித்திரை, கண் வங்கி போன்ற பிரிவுகள் செயல் பட்டு வருகிறது. தொடர்ந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரந்து தற்போது நாளொ ன்றுக்கு 700 பேருக்கு மேல் வருகின்றனர். ஆசிய அளவில் பழமையான இந்த கண் மருத்துவமனைக்கான கட்டிடம் முழுவதும் ஆங்கி லேயர் காலத்தில் காற்றோட் டத்துடன், விசாலமாக கட்டப் பட்டது. நூற்றாண்டு விழா  காணும் இந்த மருத்துவ மனை கட்டிடத்தை பாதுகாக் கப்பட்ட இடமாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத் தனர். நூற்றாண்டு விழா காணும் இந்த மருத்துவமனைப் பிரிவை மண்டல கண் சிகிச்சை மருத்துவ மைய மாக தரம் உயர்த்தியும், 120 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஏற் படுத்தி, ரூ.16 கோடியே 47 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் 29- ஆம் தேதி தற்போது தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆணை பிறப்பித் துள்ளது. இது குறித்து தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் கூறியதாவது: 1809-ஆம் ஆண்டு லண்டனில் தொடங் கப்பட்ட `மார்ஃபீல்டு’தான் உலகின் முதல் கண் மருத்துவ மனை. அதற்கடுத்து, 1819- ஆம் ஆண்டு ஜூலை மாதம், டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட் சன்னால் தொடங்கப்பட்டது `மெட்ராஸ் கண் மருத்துவ மனை. முதலில் ராயப்பேட் டையில் தொடங்கப்பட்டு, இடப் பற்றாக்குறை காரண மாக 1844 ஆம் ஆண்டு சென்னை எழும்பூருக்கு மாற்றப்பட்டது. அதற்கு அடுத்தாற்போல் உள்ளது தஞ்சாவூர் இராசா மிராசுதார் கண் மருத்துவப் பிரிவு தான். உலகில் பழ மையான கண் மருத்துவ மனையில் இது மூன்றாம் இடத்தை வகிக்கிறது. இங்குள்ள கட்டிடம் ஆங்கி லேயேர் கால பாணியில் கட்டப்பட்டுள்ளதால், அது தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட உள்ளது.  மேலும், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு “நினைவு அலங்கார வளைவு” அமைக்கும் கட்டி டப் பணி நடைபெறுகிறது. தற்போது கண் மருத்துவ பிரிவாக இருந்ததை, மண்டல கண் சிகிச்சை மருத்துவ மையமாக தரம் உயர்த்தியும், 120 படுக்கை கொண்ட மருத்துவ மனையை ஏற்படுத்தி ரூ.16 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது” என்றார்.