tamilnadu

தஞ்சாவூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

மரக்கன்று நடும் விழா 
தஞ்சாவூர், செப்.8- தஞ்சாவூர் மாவட்டம், திட்டை முத்துமாரியம்மன் கோயில் அருகில் திட்டை கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் சார்பில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பேசினார். கரந்தை தமிழ்ச்சங்க செயலாளர் இராமநாதன், கரந்தை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் திட்டை கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலப்பட உணவு விற்பனை செய்த 4 பேருக்கு சிறை 
மன்னார்குடி, செப்.8- திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நிய மன அலுவலர் பி.கே.கைலாஸ் குமார் செயற்கை வண்ணங் கள் கலந்த உணவு பொருட்கள் சாப்பிட்டு வரு பவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. செயற்கை வண்ணம் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.  இது பற்றி அவர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற செயற்கை வண்ணத்தில் ரோஸ்மில்க் தயாரித்து விற்பனை செய்த மன்னார்குடி கார்த்தி என்ப வருக்கு ரூ.10,000 அபராதம், பாதுகாப்பற்ற செயற்கை வண்ணத்தில் கலர் வத்தல் விற்பனை செய்த கோபால் என்பவருக்கு ரூ.10,000, சாயம் கலந்த பாசிப்பயறு விற்பனை செய்த வடூவூர் ஷாகுல்க்கு ரூ.12,000, பாசிபயிறு தயாரிப்பாளர் வேளங்கண்ணி ஆரோக்கியம் என்பவர்க்கு ரூ.10,000 என அனைவர்க்கு தலா ஒரு நாள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குடவாசல், செப்.8- தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றியப் பேரவை, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க ஒன்றிய தலை வர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் தியாகு. ரஜினி முன்னிலை வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், கூட்டத்தில் எடுத்த முடிவுகளை சிறப்பாக அமல்படுத்த வேண்டி விளக்கி பேசினார்.  பேரவையில், செப்.30 தேதி பி.சீனிவாச ராவ் நினைவு தினத்தை விவசாயிகளின் எழுச்சி தினமாக கொண்டாடு வது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 25 நாட்க ளாகியும் நாட்டாற்றில் இதுவரை தண்ணீர் வராததை கண்டித்து வரும் 11-ம் தேதி கொல்லுமாங்குடி கடைவீதி யில் சம்பா சாகுபடி செய்ய உடனே நாட்டாற்றில் தண்ணீர் திறக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலக்கிய மன்ற தொடக்க விழா
மன்னார்குடி, செப்.8- மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் இக்கல்வி யாண்டிற்கான கம்பன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் டி.எல்.இராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசி ரியர்கள் எஸ்.சுரேஷ்குமார், கே.முரளிதரன், முதுகலை ஆசிரியர் எஸ்.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்த னர். தமிழாசிரியர் டி.செல்வராஜ் வரவேற்றார்.  மாணவியர், புரட்சிக்கவி பாரதிதாசன் பாடலை பாடி னர். பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் டி.பி.இராம நாதன் இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தார். திருக்குவளை அரசு பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை யாசிரியர் எம்.விவேகானந்தன் சிறப்புரையாற்றினார். தமி ழாசிரியர் ஆர்.செல்வராஜ் இலக்கிய மன்ற உரை நிகழ்த்தி னார். மாணவர்கள் ஆர்.மாதேஷ் மாணவி சகானா சாவ்லா ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழாசிரியை கே.சுமதி நன்றி கூறினார்.