tamilnadu

தஞ்சாவூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு பேரணி  மக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு 
தஞ்சாவூர், ஜூலை 21- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி 23ஆம் தேதி தஞ்சையில் விவசாயிகள் பேரணி நடத்த உள்ளனர். இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கூறி உள்ளனர்.  இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களை பாலை வனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும், காவிரி படுகையை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை பாது காத்திட உரிய நீரை பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாவட்ட காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பேரணி நடைபெற உள்ளது.  இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அந்த அறிக்கையில் கூறி உள்ளனர்.

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி 
தஞ்சாவூர், ஜூலை 21- தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குடியிருப்பவர் வீரையன் மனைவி காளியம்மாள்(56) இவர்கள் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு சரவணன், சாந்தி 2 பிள்ளைகள் உள்ளனர்.  பேராவூரணி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இத னா‌ல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீரையனின் குடிசை வீட்டில் மழைநீர் ஒழுகியது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இவர்களது மண் சுவரிலான குடிசை வீட்டில் பழுது பார்க்கும் பணி நடந்து வந்தது. அப்போது மழையில் ஊறி இருந்த மண் சுவர் திடீரென சரிந்து காளியம்மாள் மீது விழுந் தது. இதில் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பலி யானார்.  இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் க.ஜெய லெட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் நேரில் விசா ரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து பேராவூரணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காளியம்மாள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோயில் நில சாகுபடி விவசாயிகளுக்கும் ரூ.6000 உதவித்தொகை வழங்க கோரிக்கை
மன்னார்குடி, ஜூலை 21- கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கும் மத்திய அரசு நிதி ரூ.6ஆயிரம் நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றியக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்தின் கூட்டம் கே.டி.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஏ.தங்கவேலு, மன்னன்.மணி, வி.லெட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்தி ருக்கும் ரூ.6 ஆயிரம் மானியத்தை கோயில் நிலங்களில் சாகுபடி செய்வோருக்கும் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். மன்னார்குடி ஒன்றிய கிராமங்களில் பாசன வாய்க்கால்கள் வடிகால்கள் வாரப்பட்டு மராமத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சையில் சமையலர், துப்புரவு ஊழியர் காலிப் பணியிடம் 
தஞ்சாவூர், ஜூலை 21- புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்டச் சிறை யின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை மற்றும் கும்பகோணம் கிளைச் சிறைகளில் காலி யாக உள்ள தலா 1 சமையலர் பணியிடத்துக்கு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 2 வருட முன் அனுபவம் வேண்டும். சம்பளம் ரூ15,900 மற்றும் இதரப்படிகள் வழங்கப்படும்.  மேலும் பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், கும்ப கோணம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள தலா 1 துப்புரவு பணியாளர் காலி இடத்திற்கும் 10.8.19-க்குள் விண் ணப்பிக்கலாம். தமிழில் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். 2 வருட முன் அனுபவம் வேண்டும். சம்பளம் ரூ15,700 மற்றும் இதரப்படிகள் வழங்கப்படும்.  விருப்பமுள்ளவர்கள் சிறைக் கண்காணிப்பாளர், பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்டச் சிறை, புதுக்கோட்டை- 622001, தொலைபேசி எண் 04322-222220 முகவரிக்கு விண் ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.