தஞ்சாவூர், பிப்.27- குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இன்று நடக்கும் போராட்டத்தை தமிழக அரசு அனுமதிக்ககூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியுரிமை சட்டத்து எதிராக போராட் டம் நடந்த தில்லியில் ஒரே நேரத்தில் அதுவும் உள்துறையை வகிக்கக்கூடிய அமித்ஷா இருக்க கூடிய இடத்தில் கல வரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தையும், காவல் துறை அதிகாரிகளையும் நீதி மன்றம் கண்டித்துள்ளது. அதே போல் அமைதி பூங்காவாக இருக்கக் கூடிய தமிழகத்தில் இப்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடக்க கூடிய இடத்தில், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாளர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு அரசு அனுமதித்தால் கலவ ரத்துக்கு திட்டமிடுகிறார்கள் என்று தான் பொருள். கலவரத்துக்கு திட்டமிட்டால் அதன் விளைவு என்னவாகும். அமைதி யாக இருக்க கூடிய இடத்தில் குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு போன்ற சட்டங்கள் தேவையில்லை இவை அரசி யல் சட்டத்துக்கு எதிராக உள்ளது என பொது மக்கள் பொதுவாக கருத்து தெரி வித்து போராட்டம் நடத்துகிறார்களே அவர் களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி வேறுவிதமான போராட்டத்தில் ஈடுபட வுள்ளதாக தெரிகிறது. இந்த போராட் டத்தை மாநில அரசு அனுமதிக்கப் போகி றதா என்பது தான் மிகப்பெரியகேள்வி. இந்திய பொருளாதாரத்தை திசை திருப்ப மத்திய அரசு இப்படி நடந்து கொண்டிருக்கிறது. இந்திய பொருளா தாரம் நாளுக்கு நாள் கீழே போய் கொண் டிருக்கிறது. கடன் சுமை அதிகரிக்கிறது. வேலை வாய்ப்புகள் பறி போய் கொண்டி ருக்கிறது. அவர்கள் சொன்ன எந்த வாக் குறுதியும் நிறைவேற்றவில்லை. இதிலி ருந்து மக்களை திசை திருப்பவே இந்த மூன்று சட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு மோசடி என்பது நாளுக்கு நாள் வெளியே வந்து கொண்டிருக்கிறது. தற்போது கூட மோசடியாக இந்த தேர்வு எழுதிய விவரம் வெளியே வந்து கொண்டி ருக்கிறது. நீட் தேர்வில் நமது பிள்ளைகள் உயிர் பறிக்கப்படுகிறது. இதுவரை 9 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். திராவி டர் கழகத்தின் மத்திய நிர்வாக குழுவின் முடிவின் படி வரும் மார்ச் 23-ம் தேதி நாடு தழுவிய அளவில் நீ்ட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது. இந்தியாவில் 22 மொழிகள் உள்ள தில் சமஸ்கிருத்துக்கு மட்டும் அதிக சலுகை வழங்கப்பட்டுள்ளது. செம்மொழி தமிழுக்கு நாளுக்கு நாள் சலுகை மறுக் கப்படுகிறு. மத்திய கல்விக் கொள்கை என்ற குலக்கல்வி கொள்கையை கண் டித்தும், நீட் தேர்வினை ஒழிக்கப்பட வேண்டும் என எதிர்த்தும் போராட்டத் தில் ஈடுபட உள்ளோம். காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக் கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறி விக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஏற்கெ னவே வழங்கப்பட்ட அனுமதி உள்ளது. இன்னொரு பக்கம் தடை சட்டம் போட்டுள் ளது. இது இரட்டை வேடம் போன்று உள்ளது. இதில் ஏதாவது ஒரு நிலைப் பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.