தஞ்சாவூர், டிச.7- குழந்தைகளுக்கு எதி ரான பாலியல் குற்ற வழக்கு களுக்கான மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தஞ்சாவூர் நீதி மன்ற வளாகத்தில் வியா ழக்கிழமை திறக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி சிவஞானம் தலைமை வகித்து நீதிமன்ற அலுவலர் பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ் வரன், கூடுதல் நீதிபதிகள் கே. கருணாநிதி, ஆர்.தங்கவேல், சார்பு நீதிபதி சுதா, போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக் கும் சிறப்பு நீதிபதி எழிலரசி, அரசு வழக்கறிஞர் மனோக ரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமாரவேல், செய லாளர் கீர்த்திராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதில் காவல் கண்கா ணிப்பாளர் மகேஸ்வரன் பேசியதாவது: குழந்தைகளு க்கு எதிராக பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 120 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் 60 நாட்க ளுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது திறக் கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார். மாவட்ட நீதிபதி சிவஞா னம் பேசியதாவது: சமுதா யத்தில் குற்றங்களை ஒழிக்க முடியாது. ஆனால் தடுக்கலாம். குழந்தைகளு க்கு சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் நல்லொழுக் கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்களை நல்வழி படுத்தலாம். போக்சோ சிறப்பு நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்” என்றார்.