தஞ்சாவூர், பிப்.10- தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதி களை செய்து தர வேண்டும். மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில், திங்கட்கிழமை மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இக்கல்லூரியில் 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி மற்றும் விடுதிகளில் கழிப்பறை, குடிநீர், கேண்டீன் உள்ளிட்ட அடிப் படை வசதி மோசமான நிலையில் இருந்தது. மேலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நீண்ட கால மாக வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் தீர்வு காணப்படவில்லை. இதனால் மாணவர்கள் திங்கள் கிழமை வகுப்புகளைப் புறக்க ணித்து உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி தலைமை வகித்தார். கிளைத் தலை வர் வீரமுத்து முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பிடல் காஸ்ட்ரோ, கிளைச் செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டனர். போராட்டத்தையடுத்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன், பேராசிரியர் கோவிந்தராஜ், காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தனர். ஒரு வார காலத்திற்குள் பிரச்சனை யை தீர்க்கவில்லை என்றால், பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.