tamilnadu

img

வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.2- சிவகங்கை மாவட்டத்தில், கிராம உதவியாளர் படுகொலை செய்யப் பட்டதை கண்டித்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை, தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சிவகுமார் தலைமை வகித் தார். வட்டச் செயலாளர் விஜயா வர வேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை தாலுகா, திருவேகம்புத் தூர் கிராம உதவியாளர் ராதா கிருஷ்ணன், நில ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காக படுகொலை செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு பணி யிடங்களில் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட கவுரவத் தலைவர் கணேசன், மாவட்ட துணைத் தலை வர் பரஞ்ஜோதி, வருவாய் ஆய்வா ளர்கள் அஷ்ரப்அலி, பாண்டிய ராஜன், சுப்பிரமணியன், துணை வட் டாட்சியர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கண் டன உரையாற்றினர். கிராம உதவி யாளர்கள் கலந்து கொண்டனர். சுரேஷ் நன்றி கூறினார்.