tamilnadu

குடிமராமத்து திட்டத்தின் கீழ் கள்ளப்பெரம்பூர் ஏரி சீரமைப்பு

தஞ்சாவூர் ஜூன்.18- தஞ்சாவூர் வட்டம், கள்ளப்பெரம்பூர் ஏரி  குடிமராமத்து திட்டத்தின் கீழ், ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கும் பணியினை, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு புதன்கிழமை அன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்.  தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், கள்ளப்பெரம் பூர் கிராமத்தில் கள்ளப்பெரம்பூர் ஏரி அமைந்துள்ளது. 640 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரியின் மூலம் சுமார் 2,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

வெண் ணாற்றின் கிளை வாய்க்காலான ஆனந்தக்காவேரி வாய்க்கால் கச்சமங்கலம் அணைக்கட்டு மேல்பகுதியின் வலது கரையில் பிரிந்து கள்ளபெரம்பூர் ஏரியில் கலக்கிறது.  கள்ளப்பெரம்பூர் ஏரியின் நீளம் 3,218 மீட்டர் ஆகும். 41.82 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரியில் 8 மதகுகள் உள்ளது. கள்ளப்பெரம்பூர் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மணல்மேடுகள் ஏற்பட்டுள்ளதால், நீர் சேமிப்பு பகுதி குறைந்து, பாசனத்திற்கான தண்ணீர் அளவு குறைந்தது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் கள்ளப்பெரம்பூர் ஏரியை புனரமைத்தல், 4 மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், ஏரியை தூர்வாரி மணற் குன்றுகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.