tamilnadu

img

நுண்கடன் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனத்திற்கு முடிவு கட்டக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 17- நுண்கடன் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஆட்சியரின் நேர்முக உதவியாள ரிடம், மாதர் சங்க தஞ்சை மாவட்டத் தலை வர் ஆர்.கலைச்செல்வி, பொருளாளர் இ.வசந்தி, மாவட்டக்குழு உறுப்பினர் வன ரோஜா ஆகியோர் அளித்த மனுவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் நுண் நிதி நிறுவனங்கள் அடாவடியாக கடன், வட்டி வசூல் செய்து வருகின்றனர். வசூலுக்கு செல்லும் ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதோடு, அடாவடியாக செயல் படுகிறார்கள்.  இதனால் பல பெண்களும், அவர்களது குடும்பத்தாரும், பெரும் மன உளைச்ச லுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டப் படுகிறார்கள். மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. குறிப்பாக கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி ரெகுபதி, கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய தலையீடு செய்து நுண்கடன் நிதி நிறுவ னங்களின் அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.