tamilnadu

கபசுர குடிநீர் வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில்  ஆவணம் சாலை பெரியார் சிலை அருகில் பொதுமக்களுக்கு  கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கத் தலைவர் ஜி.முருகுவளவன் தலைமை வகித்தார். கொரோனா தீநுண்மி யைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்ப டுத்தும் விதமாகவும், பொதுமக்கள் 300 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.