tamilnadu

சாலைப் பள்ளங்களை  சரி செய்ய அறிவுறுத்தல்

  தஞ்சாவூர், நவ.5- தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் டெங்கு கொசு கட்டுப்படுத்துதல் குறித்து ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின்; வசிப்பிடத்தின் அருகாமையிலுள்ள வீடு களில் ஏடிஎஸ் கொசு புழுக்களை கண்டறிந்து அழித்து, அப் பகுதியை முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும். பேருந்து நிலையங்களின் பொதுக் கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரித்திட வேண்டும். குடிநீரை தினந்தோறும் குளோரினேசன் செய்ய வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரி செய்ய வேண்டும்” என ஆட்சியர் அறிவுறுத்தினார்.  பின்னர், மாவட்ட புள்ளியில் துறையால் தயாரிக்கப்பட்ட 2018-19 ஆம் ஆண்டிற்கான மாவட்ட புள்ளியியல் கையேட் டினை  ஆட்சியர் வெளியிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.