tamilnadu

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு உதவி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர், மார்ச் 11- கஜா புயலால் பாதிக்க ப்பட்ட மக்களுக்கு வீடுகள்  கட்டித் தருவது தொடர்பான  ஆலோசனைக் கூட்டம் பேரா வூரணியில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு பட்டுக்கோ ட்டை சார் ஆட்சியர் கிளா ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தார். சேதுபாவா சத்தி ரம் ஒன்றியப் பெருந்தலை வர் மு.கி.முத்து மாணிக்கம்  முன்னிலை வகித்தார். பேரா வூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலை வர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி பேசுகையில், “பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட குடு ம்பங்களுக்கு பட்டா வழங்கு தல், வீடு கட்டித் தருதல் குறி த்தும், பாதிக்கப்பட்ட இடங்க ளில் ஆய்வு செய்யப்பட்டு எடுத்து வரும் நடவ டிக்கைகள் குறித்தும் பேசினார்.  நிகழ்ச்சியில், சார் ஆட்சி யர் கிளாஸ்டன் புஷ்பராஜ் பேசுகையில், ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தை  கண்டறியவும், ஆட்சேப னைக்குரிய புறம்போக்கு நிலத்தை கண்டறிந்து அதிகா ரிகளிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காண வேண்டும். இது வரை, கஜா புயலில் பாதிக்க ப்பட்ட குடும்பங்கள் அளித்த  மனுவை பரிசீலித்து பட்டா  வழங்குவதற்குரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் ஆற்று புறம்போ க்கு, குளத்து புறம்போக்கு போன்ற பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களை கண க்கெடுத்து அவர்களுக்கு வேறு இடத்தை தேர்வு  செய்து, விலை கொடுத்து  வாங்கி பட்டா வழங்க அரசு  தயாராக உள்ளது. ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இடங்களை தேர்வு  செய்ய ஊராட்சி மன்றத் தலை வர்கள், அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, அவர்களுக்கு நிலையான குடியிருப்பு இடத்தை அளி க்க ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.  தற்போது மத்திய, மாநில  அரசுகள் வழங்கும் இலவச வீடு கட்டுதல் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டு, அதை மக்களுக்கு கொ ண்டு செல்வது குறித்தும்  கூட்டத்தில் ஆலோசிக்க ப்பட்டது.  பேராவூரணி வட்டத்தி ற்குட்பட்ட குருவிக்கரம்பை, பெருமகளூர், ஆவணம், பே ராவூரணி ஆகிய சரகத்து க்குட்பட்ட இடங்களை விரை வாக தேர்வு செய்து பட்டா உள்ள பயனாளிகளுக்கு உட னடியாக வீடு கட்ட நடவ டிக்கை எடுக்க அதிகாரிக ளுக்கு சார் ஆட்சியர் உத்தர விட்டார். மேலும் வீடு கட்டும்  பணியை தொடர்ந்து கண்கா ணிக்கவும், புதிதாக வீடு கட்ட அனுமதி கோரியுள்ள பய னாளிகளுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்க ளுடன் கலந்து ஆலோசித்து  அவர்கள் வீடு கட்டும் பணியை மேற்பார்வையி டவும் ஊராட்சி மன்ற தலை வர்களை அறிவுறுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார வள ர்ச்சி அலுவலர்கள் தவமணி (பேராவூரணி), ரமேஷ் (சேது பாவாசத்திரம்) தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.